tamilnadu

img

30  செய்தியாளர்களுக்கு கொரோனா.... 50 ஆக அதிகரிக்கும் என அச்சம்

மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2,070 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் மட்டும் 30 பேர் உள்ளனர். செய்தியாளர்கள் எண்ணிக்கை 50 ஆக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து "நியூஸ் மினிட்" இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
மும்பையில்  170 செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டனர். இவர்களில் 30 பேருக்கு கொரோனா தொற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 50 ஆக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சோதனையின் முடிவுகளுக்காக பிரஹான் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் காத்திருக்கின்றனர். மும்பையில் ஒரு தொலைக்காட்சி சேனலின் நிருபர்கள் அனைவரும்  பரிசோதனை செய்துகொண்டதாகவும் அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று அறிகுறியில்லை என்று  நாவலாசிரியர் அசோக் பக்ரியா ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் அதிகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் மகாராஷ்டிராவில் உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் 4,203க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பையில் மட்டும் 2,070  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் 507 நலமடைந்துவிட்டனர்.  223 பேர் உயிரிழந்துள்ளனர்.