tamilnadu

img

மேலும் 147 பேருக்கு பாதிப்பு ... மகாராஷ்டிரா காவல்துறையை மிரட்டும் கொரோனா...

மும்பை
நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிகையை சந்தித்துள்ள மகாராஷ்டிராவில் இதுவரை 5.48 லட்சம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். 18,650 பேர் பலியாகிய நிலையில், 3.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் பொதுமக்களை கொரோனவிலிருந்து காக்கும் பணியை மேற்கொண்டு வரும் போலீசார்கள் அதிக அளவில் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 147 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட போலீசார்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை (11,920)  நெருங்கி வருகிறது. இதுவரை 9,569 பேர் குணமடைந்த நிலையில், 124 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;