tamilnadu

img

மும்பையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை உள்ளாக்கி கொலை செய்த நபர் கைது

மும்பையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வில்பார்லே(vile parle) பகுதியில் உள்ள நேரு நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 9வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று காணாமல் போன குழந்தையுடன் குற்றவாளி பேசும் காட்சி அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து ஜுகூ நகர காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிந்ததோடு அந்த நபரை கைது செய்தனர்.


முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த அந்த நபர் பின்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு பொதுக்கழிப்பிடத்தில் சிறுமியின் உடலை மறைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த நபர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கடத்தல் வழக்கில் சிறையிலிருந்து விடுதலையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கழிவறையிலிருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜிகூ காவல் நிலையம் முன்பு அப்பகுதி மக்கள் பலர் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

;