tamilnadu

img

தகுதி போட்டியைத் தள்ளி வையுங்கள்

சுஷில் குமார் வித்தியாசமான  வேண்டுகோள்

மார்ச் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் மற் றும் ஒலிம்பிக் தொடருக்கான மல்யுத்த தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்குள் இந்தியாவில் நடைபெறும் மல்யுத்த தகுதி சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் இந்த 2 தொடர்களில் பங்கேற்க முடியும்.   இந்நிலையில், இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரான சுஷில் குமார் தோள்பட்டைகாயத்திலிருந்து இன்னும் முழுவதுமாக குணமடையவில்லை. இதனால் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான போட்டியை ஒத்தி வைக்கும்படி மருத்துவ சான்றிதழ் உடன் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு வித்தியாசமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒலிம்பிக் தொடருக்கு இன்னும் குறுகிய காலம் தான் இருப்பதால் சுஷில் குமாரின் வித்தியாசமானக் கோரிக்கையை இந்திய மல்யுத்த சம்மேளனம் ஏற்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

;