tamilnadu

img

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளியுடன் ஆறுதல் - தீபக் பூனியா

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் பூனியா வெள்ளி பதக்கத்துடன் வெளியேறியுள்ளார்.

கஜகஸ்தானில் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 86 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு விளையாடிய தீபக் பூனியா இறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் விளையாடாமல் வெளியேறியுள்ளார். இது குறித்து தீபக் பூனியா கூறியதாவது, நடந்து முடிந்த அரையிறுதி போட்டியில் எனது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் என் கால்களை தூக்கி வைத்து மல்யுத்தத்தில் பங்கேற்க முடியாது. இதனால் இறுதி போட்டியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

;