tamilnadu

உலக சிக்கன நாள் விழா  பள்ளி மாணவர்களுக்கு பரிசு  

மன்னார்குடி, நவ.7- தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழா போட்டிகளில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நடனப் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளனர்.  பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் கே.சரண்யா, எஸ்.சங்கீதா, ஏ.வர்ஷா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி கள் ஏ.எல்.  கானப்பிரியா, கே.மிருதுளா ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.  மாணவர்களையும் வழிநடத்திய ஆசிரியர் டி.செல்வராஜ் ஆகியோரையும் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.தியாக ராஜன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியா ளர் தெய்வ.பாஸ்கரன் மற்றும் மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் பா.சங்கு முத்தையா ஆகியோர் பாராட்டினர்.