tamilnadu

img

“மாநாடு வெற்றிக்கு ஒட்டுமொத்த கட்சித் தோழர்களின் அர்ப்பணிப்பே காரணம்” - கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்

“மாநாடு வெற்றிக்கு ஒட்டுமொத்த கட்சித் தோழர்களின்  அர்ப்பணிப்பே காரணம்” - கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்

24-ஆவது அகில இந்திய மாநாடு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது

சர்வதேச தரத்தில் அமைந்த ஏற்பாடுகள்

மதுரை, ஏப். 29- மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு வர லாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் நிகழ்வாக அமைந்தது என்றும் இந்த  மாநாட்டின் வெற்றிக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கட்சித் தோழர் களின் அர்ப்பணிப்பே காரணம் என்றும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். மாநாட்டு வரவேற்புக்குழு பணி நிறைவு கூட்டம் ஏப்ரல் 27 அன்று மது ரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போது, “இந்த மாநாடு மிக சிறப்பாக நடை பெற்றுள்ளதை பாராட்டும் போது எந்த  குழுவை பாராட்டுவது, எந்த குழுவை விடுவிப்பது என்று புரியவில்லை. இந்த மாநாட்டை நிறைவு செய்வதற்காக 32க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்திருந்தோம். ஒன்றோடு ஒன்று  போட்டி போடக்கூடிய முறையில் அவர்கள் எல்லாருமே அர்பணிப் போடு பணியாற்றியதன் காரணமாகத் தான் இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக, இவ்வளவு பாராட்டுகளை பெறக்கூடிய அளவுக்கு வெற்றிகர மாக நடந்திருக்கிறது” என்று கே. பால கிருஷ்ணன் தெரிவித்தார். கேரள முதலமைச்சரின் பாராட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் மாநாட்டை பாராட்டி, “உண்மையில் இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழ்நிலையில் ஒரு  மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்பதை திட்டமிட்டு சிறப்பாக நடத்திய உங்கள் எல்லாருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்” என்று கூறினார். பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி  அவர்கள் மாநாட்டு அரங்கை பார்த்து, “இது என்னை பொருத்தவரையில் ஒரு அகில இந்திய மாநாடாக நடக்க வில்லை, ஒரு சர்வதேச மாநாடு நடப்பதை போன்ற தோற்றத்தில் இந்த  மாநாடு நடக்கிறது” என்று கூறியதை யும் சுட்டிக்காட்டினார். 7 கோடி ரூபாய் செலவில்  நடந்த மாநாடு “7 கோடி ரூபாய் அளவிற்கு திட்ட மிட்டிருந்தோம், 7 கோடி ரூபாய் செல வாகியிருக்கிறது. அந்த 7 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் உள்ள உழைப்பாளி மக்கள் நமக்கு வாரி கொடுத்துள் ளார்கள்” என்று பாலகிருஷ்ணன் தெரி வித்தார். தமிழகம் முழுவதும் விளம்பரமும், ஊடக கவனமும் பல வார இதழ்களில் மாநாட்டு செய்திகள் இடம்பெற்றன. பிரெட் லைட் வார இதழ் மாநாட்டைப் பற்றி  மூன்றரை பக்க அளவிற்கு கட்டுரை வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் விளம்பரம், கிளைகள் தோறும் கொடிகள், பல்வேறு இடங்களில் தியாகிகளின் பெயரை தாங்கிய பய ணக் குழுக்கள், கலை நிகழ்ச்சிகள், 50க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடைபெற்றன. தீக்கதிர் பத்திரிகையின் பங்களிப்பு “தீக்கதிர் அளப்பரிய பணி செய்தது. உண்மையில் கட்சி உறுப்பினர்களை உணர்வூட்டி,  இந்த  பணியில் ஈடுபட வைத்தது. தீக்கதிர் பத்திரிகையில் வந்த கட்டுரைகள், வர லாற்று நிகழ்வுகள், தலைவர்களைப் பற்றிய செய்திகள், கடந்த கால தியாகி களைப் பற்றிய பல்வேறு விதமான நுணுக்கங்கள் எல்லாம் நம்முடைய கட்சி அணிகளை மிகப்பெரிய அள வுக்கு உந்தி இந்த பணியில் ஈடுபடச் செய்தன” என்று குறிப்பிட்டார். வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சி தோழர்கள் ஸ்ரீரசா, வெண்புறா, தமிழ்செல்வன் போன்றோர் வரலாற்று  கண்காட்சியை உருவாக்கினர். கண்காட்சியைப் பார்க்க ஏராளமான மக்கள் வந்தனர். திரைத்துறையினரின் ஆதரவு திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திரு ந்தார். பல திரைக் கலைஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். “திரைத் துறையிலே இருப்பவர்களின் சிந்தனையில் கூட இன்றைக்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் வந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவர்களுக்கு ஒரு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். அகில இந்திய அளவில் பாராட்டு காஷ்மீரில் இருந்து கேரளா வரை  பல மாநிலங்களில் இருந்து வந்த தலை வர்கள் மாநாட்டின் ஏற்பாடுகளை பாராட்டினர். கேரள அமைச்சர் ஏ.கே. பாலன், “பத்தாவது அகில இந்திய  மாநாடு ஜலந்தரில் நடைபெற்றது; அதி லிருந்து கலந்து கொண்டிருக்கின் றேன். ஆனால் மதுரையில் நீங்கள் நடத்திய மாநாட்டிற்கு ஈடு இணையே இல்லை,” என்று பாராட்டியதையும், கே.பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். மருத்துவ உதவிகள் மாநாட்டின் போது கேரளாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எம்.மணி அவர்களுக்கு உடல்நிலை சரி யில்லாமல் போனபோது, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மாநாட்டு அரங்கிலேயே மருத்துவக் குழு செயல்பட்டது. மதுரை மாநகர், புறநகரின் பங்களிப்பு சிறப்பானது “எல்லாவற்றையும் விட இந்த மாநாடு நடத்தக்கூடிய மையமாக இருக்கக்கூடிய மதுரை மாநகர், புற நகர் மாவட்டக்குழுக்கள், மிகுந்த பாராட்டுக்குரியவை. அநேகமாக பலரும், ‘மதுரை பல மாநாடுகளை கண்டிருக்கிறது, ஆனால் இந்த மாநாடு தான் மதுரை மாவட்டத்தில் இருக்கிற, மதுரை நகரத்தில் இருக்கிற மக்களை பேசுபொருளாக வைத்த மாநாடு’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒவ்வொரு தெருவிலும் நம்முடைய விளம்பரம், பிரச்சாரம், கொடிகள் வீடு வீடாக பறந்தன,” என்று பாலகிருஷ்ணன் பாராட்டினார். எதிர்கால அரசியல் சவால்கள் கே.பாலகிருஷ்ணன் எதிர்கால அர சியல் சவால்களையும் சுட்டிக்காட்டி னார்: “இனிவரும் காலம் மிகப்பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தாக்குதலை பயன்படுத்தி பாஜக தமி ழகத்திலும் இந்தியாவிலும் மத பிரி வினையை உருவாக்க முயற்சிக் கிறது. அதேபோல், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகி வருகிறது.” பாஜகவின் தமிழக நுழைவைத் தடுக்க அழைப்பு “பாஜக தமிழ்நாட்டில் கால் பதித்து விட்டால் எவ்வளவு பெரிய ஆபத்து  ஏற்படும் என்பதை மறந்து விடக் கூடாது. பாஜகவை எதிர்க்கின்ற, அதன் அரசியல் சித்தாந்தங்களை முறியடிக் கின்ற தீர்மானம் நம்முடைய கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்து-முஸ்லிம் என்ற பிளவுவாத அரசியலுக்கு எதிராக நாம் களம் காண வேண்டியதுள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையை அதிகரிக்க வேண்டும் “2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு இந்தியா  கூட்டணி கட்சிகளோடு நாம் ஒன்றி ணைந்து போராடினோம். அது ஒரு  மகத்தான வெற்றி. ஆனால் நாடாளு மன்றத்தில் இடதுசாரிகளின் பலம் அதி கரித்துள்ளதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த பலம் அதிகரித்துள்ளதா என்றால் இல்லை என்பதை நம்முடைய மாநாடு அழுத்தமாக பதிவு செய்துள்ளது” என்று கே.பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க அழைப்பு “ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி  இந்தியா நடைபோட வேண்டுமானால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குமரியில் இருந்து இமயம் வரை யிலே ஒரு தனிப்பெரும் சக்தியாக வள ர்த்தெடுப்பது தான் ஒரு மாற்றாக அமை யும் என்பதை இந்த மாநாடு தெள்ளத் தெளிவாக வரையறுக்கிறது,” என்றார் பாலகிருஷ்ணன். தீக்கதிர் விற்பனையை அதிகரிக்க வேண்டும் “தீக்கதிர் பத்திரிக்கையை மதுரையில் 10 ஆயிரம் தினமும் கொண்டு சேர்க்கிற பணியை கொண்டு சென்றால், அதைவிட ஒரு சிறந்த அரசியல் பணி வேறு எதுவும் இருக்காது. அன்றாட பணியாக, ஒரு  அடிப்படை பணியாக தீக்கதிர் விற்பனையை கிளைகள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். கிளைக்கு 10 தீக்கதிர் பத்திரிக்கை என்ற அள வில் நாம் அதை கொண்டு சென்றால்,  மதுரை மாநகர் புறநகர் மாவட்டங் களில் ஒரு தீர்மானகரமான சக்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்பதை நிரூபிக்க முடியும்,” என்று அவர் அழைப்பு விடுத்தார். “இந்த மாநாட்டு பணிகளை சீரும் சிறப்புமாக செப்பனிட்ட, பல  சிற்பிகள் சேர்ந்து ஒரு அழகான சிற்ப த்தை வடித்தது போல இந்த  மாநாட்டு பணிகளை வடித்த சிற்பி களுக்கு மாநிலக் குழுவின் சார்பி லே நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்” என்று பால கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார். -தொகுப்பு : ஜெ.பொன்மாறன்