tamilnadu

img

“சாலையை தனியார்மயமாக்கி ஊழியர்களின் வாழ்வைப் பறிக்கும் தமிழக அரசு” நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் குற்றச்சாட்டு

மதுரை, டிச.29- தமிழகத்திலுள்ள சாலை களை முழுமையாக தனியார் மய மாக்கி நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது என சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அ. அம்சராஜ் கூறியுள்ளார். மதுரையில் சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழக அரசு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் சாலைகளை ஒருங்கிணைத்து மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து அதை தனியார் கையில் கொடுக்க உள்ளது. ஏற்கனவே, மாவட்ட முக்கிய சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை ஐந்தாண்டுகள் ஒரே கம்பெனி பராமரிக்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், விருதுநகர், பழனிகோட்ட சாலை களை (ஆயிரக்கணக்கான கோடிள் பெறுமானமுள்ளவை) தனியாருக்கு வாரி வழங்கியதோடு பராமரிப்புப் பணிகளையும் தனியார் கம்பெ னிக்கு வழங்கியுள்ளது. பல கோட்டங்களில் உள்ள சாலை களை தனியார் கம்பெனியிடம் வழங்கவுள்ளது. இதர மாவட்டச் சாலைகளை (ODR) தனியார் கம் பெனி பராமரிக்க வழங்கிவரு கிறது. இப்படி நெடுஞ்சாலைத் துறையில் தனியாரை ஊக்கு விப்பது நமது பணியையும் வாழ் வாதாரத்தையும் பறிக்கும் நடவ டிக்கையில் தமிழக அரசு இறங்கி யுள்ளது. நெடுஞ்சாலைகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.  சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறையில் உள்ள காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை பணிகளை தனியாருக்கு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை நீலகிரி கோட்டப்பொறியாளர, கோயம்புத்தூர் நெடுஞ்சாலைத் துறை வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆகியோர் ஊழியர் விரோதப் போக்கை கைவிட வேண்டும், பழிவாங்கும் வகையில் போடப்பட்ட உத்தரவுகளை திரும்பப்பெற வேண்டுமென்றார். மேலும்  நெடுஞ்சாலை களைப் பாதுகாப்போம், தேசத்தைப் பாதுகாப்போம் என வலியுறுத்தி ஜனவரி 8-ஆம் தேதி நடை பெறவுள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கமும் பங்கேற்கி றது என்றார். தொடர்ந்து நடைபெற்ற மாநி லச் செயற்குழுக் கூட்டத்தில்  மாநி லப் பொதுச் செயலாளர் ஆ. அம்சராஜ், மாநிலப் பொருளாளர் இரா.தமிழ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல் வம், மதுரை மாவட்டச் செயலா ளர் சோலையப்பன், மாநி லத்துணைத் தலைவர் பி.முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;