“ஒவ்வொரு குழந்தையும் வன்முறை இல்லாத மகிழ்ச்சியான உலகில் வாழ வேண்டும்”
பள்ளியில், பேருந்தில், வீட்டில், பொது இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் குழந்தைகள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்படுவதை செய்தித் தாள்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் அனுதினமும் அறிந்து வருகிறோம். இந்த சூழலில் இருந்து தங்களை பாது காப்பதோடு மட்டுமின்றி எப்படி எதிர்கொள் வது என்பதை சிறு நாவலாக படைத்துள் ளார் நூல் ஆசிரியர். “குழந்தைகளுக்கான துணிச்சல் விதை தான் துணிச்சல்காரி எனும் இந்த நூல்”. இந் நூலுக்கு சிறந்த குறு நாவல் விருதை கவிதை உறவு எனும் அமைப்பு சமீபத்தில் வழங்கி பாராட்டியுள்ளது. சாதி, மதம், படித்தவர், நன்கு படிக்காத வர், ஏழை, பணக்காரர் என்று எந்த பாகு பாடும் இன்றி ஆசிரியர்கள் குழந்தைகளை சமமாக நடத்த வேண்டும். வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகளிடம் ‘குட் டச்’ என்பது எது, ‘பேட் டச்’ என்பது எது, எனக் கற்றுக் கொடுக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகள் உரிமைகள் என்னென்ன என்பதையும் கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும். ஆணாதிக்க சமூகம் குழந்தைகளை வன்கொடுமை செய்வதை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. இதிலிருந்து நம் குழந்தைகளை பாது காப்பதற்கு துணிச்சலை கற்றுக் கொடுக்க வேண்டும். துணிச்சல் உள்ள குழந்தை தன்னைத்தானே பாதுகாப்பதற்கு தயார்ப்படுத்திக் கொள்ளும். பாகுபாடின்றி அனைத்து குழந்தை களுக்கும் தற்காப்பு பாதுகாப்புக்கலையை பள்ளிகளிலும், வீட்டிலும் கற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை அவர்களாகவே தடுத்து நிறுத்தி விட முடியும். இது போன்ற பல்வேறு நிகழ்வுகளை தன்னுடைய நாவலில் மிக அருமையாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் முனைவர் சர்மிளா. இந்த நூலை வயது வித்தியாசம் இன்றி வாசிப்போம். அனைத்துப் பகுதி மக்களிடம் இந்நூலை கொண்டு செல்வது அவசியம். குறிப்பாக ஆசிரியர் சமூகம், பெற் றோர்கள், பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை மத்தியிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்கள் எல்லாம் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்திலும், உயர்கல்வி பாடத்திட்டத்திலும் இந்த நூலை கொண்டு செல்வது மிக அவசியமாகும். இதன் மூலம் வன்முறை இல்லாத, மகிழ்ச்சியான உலகில் நம் குழந்தைகள் இருக்க முடியும் என்பதில் ஐயமில்லை. முனைவர் சர்மிளா கல்லூரி பேராசிரி யர். கல்லூரியிலும், பள்ளியிலும் பயிலும் குழந்தைகள் எவ்வாறு அன்றாடம் பிரச்சனை களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக கண்டுணர்ந்தவர். எனவே இந்த சிறு நாவல் மிக அற்புத மாக படைக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரிய ருக்கும், இந்த நூலை பதிப்பித்த புக் ஃபார் சில்ட்ரனுக்கும் பாராட்டுகள். “துணிச்சல்காரி” (இளையோர் நாவல்) நூலாசிரியர்: ஈரோடு சர்மிளா விலை : ரூபாய் 80/- வெளியீடு : புக்ஸ் பார் சில்ட்ரன் சென்னை-600018. தொடர்பு எண்: 04424332924
‘காசுமீரின் தொடரும் துயரம்’
காசுமீரின் தொடரும் துயரம் என்ற தலைப்பில் உண்மையறியும் குழுவின் ஆய்வறிக்கை ஒன்று 1999 புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்திற்கு அ.மார்க்ஸ் அவர்கள் ஒரு சிறப்பான தொகுப்புரையை தந்துள்ளார். நூலை தோழர் வெ.கோவிந்தசாமி மொழியாக்கம் செய்துள்ளார். இதற்கான பல்வேறு ஆலோசனை கள் உள்பட நடராஜ் அவர்கள் வழங்கியுள்ளார். நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கார்கில் ஒரு நேரத்தில் தேச பக்தியின் குறியீடாக முன்நிறுத்தப் பட்டது. கார்கில் பிரச்னையில் மௌனம் காப்பதே ஒரு தேசத்துரோகமாகக் கருதப்பட்டது. அந்தளவிற்கு, இன்று இந்(து)திய தேசியவெறி பயங்கரமாகக் கட்ட மைக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ அனைத்துப் பாராளுமன்ற அர சியல் கட்சிகளும், இன்று இந்த தேசிய வெறிக்கு ஆளாகியுள்ளன. கார்கில் பிரச்சனைக்கு அடிநாத மாக விளங்கும் காஷ்மீர் சிக்கல் குறித்து ஒருவருமே பேசவில்லை. காஷ்மீர் சிக்கலைப் பற்றிக் குறிப்பிடாமல் கார்கில் பிரச்னை பற்றிப் பேசுவது அறிவுநாணயமற்ற செயல் என்று அறிக்கையின் வாயிலாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் காஷ்மீர் சிக்கல் பற்றிய ஒரு அடிப்படை ஆவணமாக இது கருதப்படு கிறது. காஷ்மீரில் இந்திய இராணு வம் நிகழ்த்தி வந்த மனித உரிமை கள் மீறல் குறித்து விசாரிக்க இந்தி யாவின் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பதின்மூன்று குடியுரிமை மற்றும் ஜனநாயக உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு காஷ்மீருக்கு ஒரு உண்மை அறியும் குழுவை (1995/சூலை30-ஆகஸ்ட் 7) அனுப்பியிருந்ததாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்குழு வெளியிட்ட அறிக்கை யின் தமிழாக்கமே இந்நூலாகும். காஷ்மீர் சிக்கலின் தோற்றம், காலப்போக்கில் இச்சிக்கல் அமைந்த அரசியல் திரிபுகள், நேரு வின் ஜனநாயக அணுகுமுறை, இந்துத்துவச் சக்திகளின் தலையீடு, இந்திய இராணுவத்தின் மனிதப் படுகொலைகள் என இவ்வெளியீடு விரிவாகவும், அடிப்படைச் சான்று களோடும், பிரச்சனைகளை முன்வைத்துள்ளது. இந்திய இராணுவத்தின் மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரிக்கச் சென்ற அந்தக்குழு அது பற்றி மட்டும் பேசா மல், பிரச்சனையின் அடிநாதத்தை யும் விளக்கமாக முன்வைத்துள்ளது என்பதையும் இந்நூல் பேசுகிறது. கூடுதல் விவரமாக தேவகவுடா ஆட்சியின்போது காஷ்மீர் சிக்கல் குறித்து அமைக்கப்பட்ட இரு குழுக்கள் முன்வைத்த அறிக்கையை அ.மார்க்ஸ் மேலும் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். அத்தோடு இச்சிக்க லுக்குத் தீர்வாக சில ஆலோச னைகளையும் முன்ன்வைத்துள் ளார். விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் அதில் உள்ளன. காஷ்மீரையும் கார்கிலையும் அடிப்படையாக வைத்து ஒரு தேசிய வெறியை இந்திய ஒன்றிய மோடி அரசு கட்டமைத்து கொண்டி ருக்கும் இன்றைய அரசியல் சூழலில் காஷ்மீர் போரின் அடிப்படை யான சில கூறுகளை விளங்கிக் கொள்ளத்தக்க ஒரு முக்கிய வெளியீட்டை விடியல் பதிப்பகம் தமிழில் கொண்டு வந்துள்ளது பொருத்தமான ஒன்றாகும். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை ஆராய்ந்தால் இன்றைய காஸ்மீரின் பஹல்காம் தாக்குதல் குறித்த பல தகவல்களை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். காஷ்மீர் என்பது ஒரு நிலத்தின் மீதான பிரச்சனை என்பதை காட்டி லும் இந்நூலில் பதிவு செய்யப் பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டது. குறிப்பாக தேசிய கெளரவம் தொடர்புள்ள ஒரு விசயம் அல்லது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஒரு அச்சுறுத்தல் என்ற கூடுதல் அம்சம் கொண்டதாகும். காஷ்மீரில் நடந்துவரும் மனிதப்படு கொலைகள் குறித்து இந்திய ஒன்றிய அரசு எந்த உணர்ச்சியும் காட்டாத நிலையில் தற்போதைய பஹல்காம் தாக்குதல் குறித்து உணர்ச்சிவசப்பட்ட பின்ணனி என்பதை புரிந்துகொள்வதற்கு இந்நூலின் மூலம் பதிவு செய்யப்பட்ட அறிக்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாக இருக்கும். நூலில் பதிவு செய்யப்பட்ட கருத்தின் அடிப்படையில் காஷ்மீரின் துயரம் நீடித்தால் இந்தியா ஒரு பன்பட்ட நாடு என்ற அதன் இருப்பிற்கே அது பெரும் அச்சுறுத்தலாக இருந்துவிடும். காசுமீரின் தொடரும் துயரம் முதற்பதிப்பு : அக்டோபர் 1999 வெளியீடு : விடியல் பதிப்பகம், கோவை – 641015 விலை ரூ.65
சிறார்களுக்கு மட்டுமல்ல...
சிறார்களுக்கான புத்தகம் என்ற கண்ணோட்டத்தில் வாசிக்கத் துவங்கினேன். வாசிக்க வாசிக்க இது பெற்றோர்களுக்கு மானது என புரிந்தது. ஆம் மழலைகள் நாம் சொல்வதை செய்வதில்லை. நாம் செய்வதை பார்த்து தான் செய்வார்கள். பெற் றோர்கள் தானே பிள்ளைகளின் முன்னோடி. யுகன், இனியன் நண்பர்கள் ஊடாக குழந்தைகளுக்கு கதை சொல்வது போல துவங்கி வீட்டில் எதை சமைக்க வேண்டும்? எதை சாப்பிட வேண்டும்.யுகன்,இனியன் பேசியது எறும்புகளுக்கு கேட்டதா? ராணி எறும்பின் பெயர் என்ன? ஏறும்பின் தேவைகள் என்ன? எறும்புகளின் குடும்பம் எத்தகையது? எறும்புகளுக்கு எந்த உணவு பிடிக்கும்? மழைக் காலத்தில் அவற்றின் வாழ்வியல் முறை என்ன? ஏன் எறும்பு இனியன் வீட்டுக்கு வருவ தில்லை? பின்னர் இனியன் எப்படி எறும்பை தனது வீட்டுக்கு வர வைத்தான்? பூச்சி மருந்து வைக்கா மல் யுவனின் அம்மா செல்வி என்ன மாற்று யுக்தியை பின்பற்றினார்? இனியன் வீட்டில் என்ன உணவு பழக்கம் மாறியது? இலைகள் மொழி எறும்புகளுக்கு தெரியுமா? இப்படி எறும்புகளின் வாழ்க்கையில் நடப்பதை அழகாக ‘ராணி எறும்பின் இரகசிய சமையலறை” புத்தகம் நம்மோடு பேசுகிறது. எழுத்தாளர் நீரோடை மகேஷ் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ராணி எறும்பின் இரகசிய சமையலறை ஆசிரியர் : நீரோடை மகேஸ் வெளியீடு : நீரோடை பதிப்பகம் பக்கம்: 31, விலை: 30/-