திண்டுக்கல், டிச.30- ஆன் லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யக்கோரியும் தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெறக் கோரியும் திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டப் பொருளாளர் ஜி.சேதுசிவன், நகரச்செயலாளர் எம்.பிரேம்குமார், மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.ராணி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா, மாவட்டத்தலைவர் சுமதி, பொருளாளர் பாண்டியம்மாள், நகரச்செயலாளர் ராஜேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கம் ஆன் லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாநிலச்செயலாளர் ராணி தலைமையில் இந்த இயக்கம் நடைபெற்றது.