tamilnadu

img

‘எங்கே எனது வேலை?’ - தில்லியில் இன்று இளைஞர்கள் பேரணி - ஏ.ஏ.ரஹீம் எம்.பி.,, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர்

வாலிபர் சங்க அமைப்பு தினம்

நவம்பர் 3 ஆம் தேதி இந்திய இளை ஞர் போராட்டங்களின் மின்னும் முகமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்கப்பட்ட நாள். 1980 நவம்பர் 3 அன்று பஞ்சாப் மாநிலம் லூதி யானாவில் டிஒய்எப்ஐ உருவாக்கப்பட்டது. 42 வருடமாக எண்ணற்ற போராட்டங்கள், எதிர்ப்பு கள்.. அனைத்தும், அர சியல் செயல்பாடு மற்  றும் சமூக சேவையின் சிறந்த எடுத்துக்காட்டு கள். இந்திய இளைஞர்களின் முற்போக்கு அரசியல் வாழ்வின் குரலாக வாலிபர் சங்கம் முன்னேறி வருகிறது. நாட்டில் வேலை யில்லா திண்டாட்டத்திற்கு எதிராக நவம்பர் 3 ஆம் தேதி தில்லியில் வாலிபர் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படுகிறது. தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் இளைஞர்களை வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் சமத்துவமின்மைக்கு உள்ளாக்கி வருவதால், வாலிபர் சங்கம் ஒரு தீப்பொறியாக தெருக்களில் இறங்குகிறது.

வேலை மறுப்பின் சங்பரிவார் அரசியல்

2021 ஆம் ஆண்டில் தொழிலாளர்  அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்க ளின்படி, நாட்டில் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது திடீர் அதிகரிப்பு அல்ல. 1990களில் இருந்து ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசுகளால் பின்பற்றப்பட்ட புதியதாராளமயக் கொள்கைகளின் விளைவு இதுவாகும். 2014 முதல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மக்கள் விரோதக் கொள்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. வேலை வாய்ப்பு வாக்குறுதியை தொடர்ந்து மீறியது.  பரவலான பணவீக்கம் மற்றும் வேலை யில்லா திண்டாட்டம் அதிகரித்த பசி மற்றும் வறுமைக்கு வழிவகுத்தது.

காணாமல் போன மத்திய வேலை வாய்ப்புகள்

மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் நேரடி வேலைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2017- 18இல் மத்திய பொதுத்துறை நிறுவனங்க ளில் பணியாளர்களின் எண்ணிக்கை 10.87 லட்சமாக இருந்தது. அது 2020-21இல்  8.61 லட்சமாக குறைந்துள்ளது. எடுத்துக்காட்  டாக, சிஏபிஎப்-இல் செப்டம்பர் 2020 நில வரப்படி ஒரு லட்சம் காலியிடங்கள் உள்ளன, இங்கு ஒன்றிய அரசால் நேரடியாக ஆட் சேர்ப்பு செய்யப்படுகிறது. பல்வேறு ஒன்றிய அரசுப் பணிகளுக்கு 2014ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசால் பெறப்பட்ட 22.05 கோடி விண்ணப்பங்களில், ஆட்சேர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் உண்மையான எண்ணிக்கை 7.22 லட்சம்  மட்டுமே. ஒன்றிய பொதுத்துறை தனியார்  மயமாக்கலும் வேலையில்லா திண்டாட் டத்தை அதிகரிக்கிறது. பல்வேறு மத்திய பல்க லைக்கழகங்களில் எஸ்சி பிரிவில் 958 இடங்களும், எஸ்டி பிரிவில் 576 இடங்க ளும், ஓபிசி பிரிவில் 1761 இடங்களும் காலி யாக உள்ளன. மாநிலங்களவையில் டாக்டர். வி.சிவ தாசன் எழுப்பிய கேள்விக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அளித்த பதிலில்,  2016ஆம் ஆண்டு முதல் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவது தெளிவாகிறது. 2016- 2021ஆம் ஆண்டில் 2.68 லட்சம் பணி யிடங்கள் குறைப்பு என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தை ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ளது. 2016-17இல் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் 11.29 லட்சம் பணியாளர்கள் இருந்தனர். 2021 இல் 8.61 லட்சமாக குறைந்துள்ளது.

மரணத்தை அறுவடை செய்யும் வேலையின்மை

இன்று இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய நெருக்கடி என்  பதை அனைத்து ஆய்வுகளும் உறுதிப் படுத்துகின்றன. கோவிட் சகாப்தத்திற்கு முன்பிருந்ததை விட வேலை செய்யும் தொழி லாளர்களின் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அக்டோபர் 2019இல் தொற்று நோய்க்கு முந்தைய 43 சதவிகிதத்தில் இருந்து தொழிலாளர் பங்கேற்பு செப்டம்பர் 2022இல் 39 சதவிகிதமாக குறைந்துள் ளது. 2014இல் அரசு வேலைகளில் 4.2 லட்  சம் அங்கீகரிக்கப்பட்ட காலியிடங்கள் இருந்தன. அது 2020இல் 9 லட்சமாக  உயர்ந்துள்ளது. தற்போது, மதிப்பீடுகளின் படி, மாநில மற்றும் மத்திய பணியிடங்களில் 60 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பணவீக்கம் (விலை உயர்வு) காரணமாக உண்மையான ஊதியங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. பெரும்  பாலான தொழிலாளர்கள் ரூ.10,000க்கும் குறைவாகவே சம்பளம் வாங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அவலநிலையின் விளைவு என்ன? வேலையின்மையால் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். 2021  ஆம் ஆண்டில், காவல்துறை 1,65,033  தற்கொலை வழக்குகளைப் பதிவு செய்  துள்ளது. தற்கொலை செய்துகொள்ப வர்களில் பெரும்பாலானோர் தினக்கூலி மற்றும் வேலையில்லாதவர்கள். ஒன்றிய அரசின் அலட்சியம் மற்றும் கொள்கை களால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்.

நம்பிக்கையை உடைத்த அக்னி பாதை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் வேலை உறுதித் திட்டங்களில் நிவாரணம் வழங்குவதுதான் அரசால் செய்ய முடியும். ஆனால், அதற்கு நேர்மாறாக சமீப கால மாக ஒன்றிய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி இளைஞர்களின் நம்பிக்கை யை எல்லாம் தகர்த்து வருகிறது. அதில் முக்கியமானது அக்னிபாதை திட்டம். இத்திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடு கண்ட மாபெரும் போராட்டங்கள், இளைஞர்கள் வேலையின்மையால் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்த்துகிறது. இன்றும் கூட, ஆயு தப்படைகளில் ஒப்பந்த தொழிலாளர் முறை யை அமல்படுத்துவது தேசிய பாதுகாப்பை எப்படி பாதிக்கும் என்று நாடு கவலை அடை கிறது. ஆயுதப் படைகள் மட்டுமல்ல, எந்தத் துறையையும் தனியார்மயமாக்குவதுதான் அவர்களின் கொள்கை.

கேரளாவில்  மாற்று அரசியல்

கேரள அரசு ஒன்றிய அரசுக்கு மாற்றாக ஒரு உறுதியான மாற்றத்தை உருவாக்கி வரு கிறது. ஒன்றிய அரசும், பிற மாநில அரசு களும் வேலைவாய்ப்பு வழங்கும் பொறுப்பை கைவிட்டபோது, கேரளா புதிய வாய்ப்புகளைக் கண்டறிகிறது. 2016 முதல், கேரளா ஏற்கனவே இரண்டு லட்சம் பேருக்கு தேர்வாணையம் வேலைகளுக்கான ஆலோசனை குறிப்புகளை வழங்கியுள் ளது. காலியிடங்கள் குறித்த நேரத்தில் அறி விக்கப்பட்டு ஆட்சேர்ப்பு நடந்து வருகிறது. கேரளாவில் உள்ள இடதுசாரி ஜனநாயக  முன்னணி அரசு, பொதுத்துறையைப் பாது காக்கும் தனது மாற்றுக் கொள்கையைத் தொடர்கிறது. ஒன்றிய அரசால் மூடப்பட்ட பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கேரள அரசு கையகப்படுத்தி பணிகளை தொடங்கியுள்ளது. ஒன்றிய அரசால் மூடப்பட்ட ஹிந்துஸ்  தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் நிறுவனத்தை அரசு எடுத்துக்கொண்டு, கேரள பேப்பர்  புராடக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியது. ஒன்றிய அரசால் விற்ப னைக்கு வைக்கப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் லேடெக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கைய கப்படுத்த மாநிலம் ஏற்கனவே விருப்பம் தெரி வித்துள்ளது. இது ஒரு மாற்று அணுகுமுறை, மக்கள்நல கேரள மாதிரி. இது தவிர, லட்சக்க ணக்கான புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அறிவுப் பொருளா தார இயக்கத்தின் மூலம் குறைந்தது 20 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதற்கான செயல் திட்டத்தை வகுத்து கேரளா முன் னேறி வருகிறது.

போராட்ட களத்தில் இணையுங்கள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நாடு தழுவிய போராட்டங்களைத் திட்டமிடு வதற்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் இதுபோன்ற போராட்டங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கும் உறுதியுடன் உள்ளது. அக்னிபாதை திட்டம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக அரியானாவில் இளைஞர்கள் பேரணி, பீகாரில் சட்டமன்றம் முன் மாபெரும் இளைஞர் பேரணி, 3,000 கிமீ தூரம் தமி ழகத்தில் சைக்கிள் பேரணி, தெலுங்கானா, ஆந்திரா, தில்லியில் போராட்டம், தொகுதி அளவிலான பேரணி. அதோடு கடந்த ஒரு மாதமாக கேரளாவில் நடந்து வரும் போராட்டங்கள் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பல மாதங்களாக நடந்துவரும் நாடு தழு விய பிரச்சாரத்திற்குப் பிறகு, இளைஞர்கள் வாலிபர் சங்கம் தலைமையில் தேசிய தலைநகரை அடைந்து வருகின்றனர். இது நம் முன் உள்ள சிறிய பொறுப்பு அல்ல. பெரிய போர்களை நடத்த வேண்டிய நேரம் இது. நாட்டின் பல மூலைகளிலிருந்தும் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் “எனக்கு வேலை எங்கே” என்ற கேள்வியை எழுப்பி,  தில்லி வந்தடைவது, வரும் நாட்களில் வலுப்  பெறப் போகும் மாபெரும் போராட்டங்க ளுக்கு வலு சேர்ப்பதாக இருக்கும். இளை ஞர்களின் குரல். தேசியத் தலைநகரில், நவம்பர் 3ஆம் தேதி இந்திய நாடாளு மன்றத்தின் முன் கேட்கப்போகிறது. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான இளைஞர்களின் போராட்டத்தில் 2022 நவம்பர் 3ஆம் தேதி ஒரு புதிய வரலாற்றைக் குறிக்கும்.

தேசாபிமானியில் இருந்து 
தமிழில் - சி.முருகேசன்