மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி, ஜூன் 12 தூத்துக்குடி அருகே குடோனில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான பட்டாணி மூட்டைகளை திருடி யது தொடர்பாக ஒரு வர் கைது செய்யப் பட்டுள்ளார். தூத்துக்குடி போல்பேட்டையைச் சோ்ந்த வெள்ளைச் சாமி மகன் கருப்பசாமி (65) என்பவருக்குச் சொந்தமான பட்டாணி சேமிப்பு கிடங்கு சுங்கச்சாவடியை அடுத்துள்ள அரசரடி பகுதியில் உள்ளது. இங்கு கடந்த சில தின ங்களுக்கு முன்னர் கதவுகளின் பூட்டை உடைத்து 50 கிலோ எடை கொண்ட 90 பட்டாணி மூடைகளை அடையாளம் தெரி யாத நபா்கள் திரு டிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் புதி யம்புத்தூா் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இவ்வழக்கு தொ டர்பாக தூத்துக்குடி தாளமுத்துநகர், துரைசிங் நகரைச் சேர்ந்த நாராயண சாமி மகன் மாரிச் செல்வம் (35) என்ப வரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசார ணையில் அவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து பட்டாணி மூடைகளை திருடி ஆலந்தூரில் உள்ள அரவை மில்லில் விற்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆலந்தலை சென்ற போலீசார் அங்கிருந்த மில்லில் இருந்த பட்டாணி மூடைகளை மீட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வத்தின் நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.