tamilnadu

img

கரூர் மாவட்டம் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பட்டியலின மக்கள் வழிபாடு

கரூர், ஜுன் 21- மேலப்பகுதி கிராமம் வீரணம்பட்டி காளியம்மன் கோவிலில் ஆட்சியர் தலைமையில் பட்டியல் இன மக்கள் புதனன்று வழிபாடுநடத்தினர். ஸ்ரீகாளியம்மன் கோவில்  அனைத்து சமுதா யத்தினரும் வழிபட ஊர்மக்கள் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் ஸ்ரீகாளியம்மன் கோவில் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மேலப்பகுதி கிராமம் வீரணம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீகாளி யம்மன் கோவில்  திருவிழா  கடந்த 6ஆம் நாள் அன்று தொடங்கியது. அன்று, வீரணம் பட்டியை சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு இளைஞரை, அவ்வூரை சேர்ந்த சிலர் கோவி லுக்குள் அனுமதிக்க மறுத்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் தெரிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற கடவூர் வட்டா ட்சியர், மேற்படி நிகழ்வு தொடர்பாக இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். மற்றொரு பிரிவு மக்கள், இந்த கோவில், வீரணம் பட்டி உள்ளிட்ட 8 ஊர்களை சேர்ந்த தங்கள் சமூ கத்தினருக்கு மட்டுமே உள்ளதென்றும் தெரி வித்தனர்.

எனினும் இது குறித்து குளித்தலை வருவாய் கோட்டாட்சியரால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் வரை, இரு தரப்பினரும் கோவில் மண்டபத்திற்கு முன்புறமாக நின்று வழிபாடு செய்து கொள்வதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். கடந்த  8 ஆம் நாள் அன்று குளித்தலை உட்கோட்ட  நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் இருதரப்பு மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. அதனால் மீண்டும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் வரை கோவிலுக்குள் இரு தரப்பினரும் செல்ல வேண்டாம் என தெரி விக்கப்பட்டு, இருதரப்பினர் முன்னிலையில் ஸ்ரீகாளியம்மன் கோவில் தற்காலிகமாக பூட்டி வைக்கப்பட்டது. கோவில் பூட்டப்பட்டதை விரும்பாத சிலர், கோவிலை விரைவாக திறக்க வலியுறுத்தும் விதமாக சாலைமறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களிடம் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரால் இரு தரப்பினரிடமும் பேசி முடிவு செய்த பின்னர் கோவில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எனவே கடந்த 14ஆம் நாள் அன்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரில் இருந்து கலந்து கொண்ட அனைவரின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது. இதில் பட்டியல் பிரிவு மக்கள் கோவிலில் தாங்கள் வழிபட வழிவகை செய்து தருமாறு கோரினர். மற்றொரு தரப்பினர், தங்கள் இனத்தை சார்ந்தவர்களுடன் இதுகுறித்து பேசிவருவதாகவும், இரண்டு தினங்களில்  நல்ல முடிவை எடுத்து தெரிவிப்பதாகவும் கூறினர். அதன்படி அவர்கள், பட்டியலின மக்கள் வழிபடுவதில் தங்களுக்கு ஆட்சேபணை ஏது மில்லை என்பதைதெரிவித்தனர். இதனால்  இருதரப்பினரும் கோவிலில் ஒற்றுமையோடு வழி பாடு செய்ய ஏதுவாக புதனன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் கோவில் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர். சோபா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன்,  கடவூர் வட்டாட்சியர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், இன்றைய தினம் இந்த ஊரைச் சேர்ந்த அனைத்து சமுதாயத்தினரும் வழிபடக்கூடிய வகையில் அமைந்தது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.  அனைத்து மக்களுடைய ஒருமித்த முடிவாக, ஒற்றுமையாக இன்று கோவில் வழிபாடு நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில்  ஊர் மக்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறோம். மேலும் நீடித்த அமைதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை பாராட்டும் வகையில் மாவட்ட நிர்வாகம் மேல பகுதி கிராமத்திற்கு குறிப்பாக வீரணம்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறையில் சார்பாக வளர்ச்சி பணிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்துள்ளோம் இந்த ஊர் மக்கள் ஒற்றுமை நீடித்திருக்கவும் நிலைத்திருக்கவும் அனைவரும் ஒத்துழைப்போடு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என நாங்கள் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.