tamilnadu

img

சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திடுக!

சென்னை, நவ. 16 - சுமைப்பணித் தொழிலாளர்க ளுக்கு தனி நலவாரியத்தை உருவாக்க கோரி புதனன்று (நவ.16) தமிழகம் முழுவதும்  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள சுமைப்பணி தொழிலாளர்கள் உடலுழைப்பு நலவாரியத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதிலிருந்து பிரித்து புதிய  நலவாரியத்தை உருவாக்க கோரி ஆட்சியர் அலுவலகங் கள் முன்பு தமிழ்நாடு சுமைப் பணி தொழிலாளர் சம்மேள னம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்டெய்னர் கார்ப்பரே ஷன், மத்திய கிடங்கு நிறுவ னம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கக் கூடாது. கான்ட்ராக்ட்டில் பணி செய்யும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், உள்ளூர் தொழி லாளர்கள் செய்யும் சுமைப் பணி வேலையில், வெளி மாநில தொழிலாளர்களை ஈடு படுத்தி (குறைந்த கூலி வழங்கி)  உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் குடோன் சுமை தூக்கும் தொழி லாளர்களுக்கு ஆண்டுப் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு மத்திய சென்னை, தென்சென்னை மாவட்டங்கள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்க ளிடம் சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார் கூறியதாவது: ஒன்றிய, மாநில அரசு குடோன்கள், மார்க்கெட்டுகள், டாஸ்மாக்குகளில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணி யாற்றுகின்றனர். இவர்க ளுக்கு குறைந்தபட்ச கூலி, வாரவிடுப்பு, இஎஸ்ஐ, பிஎப்,  பணிக்கொடை உள்ளிட்ட சட்ட ச்சலுகைகள் அமலாக்கு வதில்லை. எனவே, சுமைப் பணித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தமிழக அரசு முத்தரப்பு குழு அமைத்து 3 ஆண்டுக ளுக்கு ஒருமுறை கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். குறிப்பாக, மீன்பாடி வண்டி களில், பொருட்களை சுமந்து  செல்லும் தூரம், மாடியில் ஏற்று வது ஆகியவற்றை கணக்கிட்டு கூலியை நிர்ணயிக்க வேண்டும். லாரி, தோல், டாஸ்மாக் நிறுவனங்களில் பணியாற்றும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். தொழிலாளர்களை காவல் துறை கண்ணியமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மத்திய சென்னை மாவட்ட தலைவர் எம். தயா ளன், செயலாளர் சி.திரு வேட்டை, துணைத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன், துணைச் செயலாளர் வி.செந்தில்குமார், சுமைப்பணி சங்க தென் சென்னை மாவட்டத் தலைவர் பா.பாலகிருஷ்ணன், செயலா ளர் எம். நீலமேகம், மத்திய சென்னை நிர்வாகிகள் எம்.ராமன், ஜி.கோதண்டன், பி.புஷ்பராஜ், எம்.நவீன்குமார் உள்ளிட்டோர் பேசினர்.