tamilnadu

img

தொழிலாளர்கள் - பொதுமக்களுக்கு இன்னலை ஏற்படுத்திய மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை

அனைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி/தூத்துக்குடி/நாகர்கோவில், மே 22- மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இன்றைக்கு பொதுமக்களும், தொழிலா ளர்களும் சொல்லொண்ணா துயரங்க ளுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே மத்திய -மாநில அரசுகள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட  வேண்டும். 8 மணி நேர வேலையை  12 நேரமாக உயர்த்தும் நடவடிக்கையை  கைவிட வேண்டும். பொதுத்துறைகளை தனியார் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். கோ விட் 19 தொற்றில் இருந்து மக்களை  பாதுகாக்க பணிபுரிந்து வரும் மருத்துவ  பணியாளர்கள், உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை நிரந்தரப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளி யன்று தமிழகம் முழுவதும் அனைத்து  தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி

பீச் ரோட்டில் உள்ள எல்ஐசி அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஐஎன்டியூசி மாநிலத் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். எச்எம்எஸ் பொதுச் செயலாளர் துறை முகம் சத்யா, சிஐடியு மாவட்டச் செயலா ளர் ரசல், ஏஐடியுசி சார்பில் பாலசிங்கம், எல்பிஎப் சார்பில் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்கள்

எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பாக அனைவருக்கும் ஊரடங்கு கால நிவா ரணம் வழங்க வேண்டும், ஆட்டோக்கள்  இயங்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு, வட்டாட் சியரிடம் மனு கொடுத்தனர். ஆட்டோ சங்க தலைவர் கண்ணன் தலைமை வகி த்தார். செயலாளர் கருப்பசாமி, பொரு ளாளர் கண்ணன் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலவைர் கு.ரவீந்திரன் நிறைவு செய்து பேசினார். தொழிலாளர் சட்டங்களை திருத்தக் கூடாது, கொரோனா கால முன்கள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடு க்க வேண்டும், கட்டுமான தொழிலா ளிக்கு நலவாரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் திடலில்  கட்டுமான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. கட்டுமான சங்க தாலுகா செயலாளர்  செல்வகுமார் தலைமை வகித்தார். பொ ருளாளர் மாரிமுத்து, துணைச் செயலா ளர் கிருஷ்ணசாமி, நடராஜன், சிபிஎம் கிளை செயலாளர் முருகேசன், இளம்பு வனம் கிளைச் செயலாளர் மூக்கையா மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கு.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை அரசு  போக்குவரத்து கழக பணிமனை முன்பு  அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாநில அமைப்புச் செயலாளர் அ.தர்மன்  தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் பெருமாள், சிஐடியு போக்குவரத்து  தொழிலாளர் சங்க பொது ச்செயலாளர் ஜோதி, மாவட்ட பொருளாளர்  மணி, பாலசுப்ரமணியன், ஏஐடியுசி  நிர்வாகிகள் உலகநாதன் ,வெங்கடே சன், சுப்பிரமணியன், ஐஎன்டியுசி செல்வம் ராமசாமி, எச்.எம்.எஸ் மாநில  துணைத் தலைவர் சுப்ரமணியன், மை க்கேல்ராஜ், டிடிஎஸ்எப் சந்தானம் உட்பட பலர் பங்கேற்று பேசினர். முன்னதாக புறவழிச்சாலை பணிம னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு போக்குவரத்து தொழிலா ளர் சங்க பொதுச் செயலாளர் ஜோதி தலைமை வகித்தார். பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். திருநெல்வேலி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு, சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொ ழிற்சங்கங்களின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலை மை வகித்தார். தொமுச என்.மகாவிஷ்ணு, ஏஐடியுசி சடையப்பன், எச்எம்எஸ் பி.சுப்பிரமணியம், மற்றும் ஏஐசிசிடியு, ஐஎன்டியூசி, பணியாளர் சம்மேளனம் எஸ்.சந்தானம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் நிறைவுரை ஆற்றினார்.

நாகர்கோவில்

இதையொட்டி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தலைமை தபால் நிலை யம், அனைத்து போக்குவரத்து பணிம னைகள், முந்திரி ஆலைகள், அரசு அலு வலகங்கள், வீடுகள் முன்பு உட்பட சுமார் 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர்  கே.தங்கமோகன், மாவட்ட துணைத்த லைவர் எஸ்.அந்தோணி, எம்எல்எப் மாவட்டத் தலைவர் மகாராஜபிள்ளை, தொமுச மாநில நிர்வாகி, இளங்கோ, எச்எம்எஸ் மாநில நிர்வாகி முத்துக்கருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு  இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்க ளில் சிஐடியு மாவட்டத் தலைவர் சிங்கா ரம், மாவட்ட துணைத்தலைவர்கள் சோபன் ராஜ், சந்திரபோஸ், பெருமாள்,  சந்திரகலா, ஜான் சௌந்தரராஜன், ஐடா  ஹெலன், பாலன், சகாய ஆண்டனி, ஸ்டீபன்ஜெயகுமார், நடராஜன், வல்ச குமார், ஆலிவர் பிரைட், லட்சுமணன், சங்கரநாராயணன் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தொழிற்சங்க தலைவர்கள் கைது

சிஐடியு மாவட்டத் தலைவர் பி.சிங்காரன் உட்பட மார்த்தாண்டம், திக்குறிச்சி, குலசேகரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவ ல்துறையினர் வழக்கு பதிவு செய்த னர். 

விவசாயிகள் ஆதரவு

அனைத்து தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் பார்வதிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயி கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் என்.முருகேசன், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் என்.எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் மலை விளைபாசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் கே.மோ கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.