tamilnadu

திருவேற்காடு நகராட்சியில் மேலாளர் பணியிடம் காலியால் பணிகள் பாதிப்பு

திருவேற்காடு நகராட்சியில்  மேலாளர்  பணியிடம் காலியால் பணிகள் பாதிப்பு

அம்பத்தூர், ஜூன் 8- திருவேற்காடு நகராட்சியில் 2 வருட மாக மேலாளர் பணியிடம் நிரப்பப்படாத தால் அன்றாடப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவேற்காடு சிறப்பு நிலை நகராட்சி அலுவலகத்தில் முக்கிய அலுவலரான மேலாளர் பணியிடம் கடந்த 2 வருடமாக காலி யாக உள்ளது. அதேபோல் முக்கிய பதவி யான வருவாய் அலுவலர் பணியிடமும் 2 ஆண்டுகளாக காலியாக உள்ளது. கணக்காளர் பணியிடமும் காலியாக உள்ளது. மேலும் கடந்த மாதம் செயற்பொறியாளர் தகுதி உள்ள நகராட்சி பொறியாளர் ஓய்வு பெற்று விட்டார். அந்த பணியிடமும் காலியாக உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நகரமைப்பு ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கவுன்சிலர்கள் பலமுறை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சிவ ராசுவிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திரு வேற்காடு சிறப்பு நிலை நகராட்சியில் முக்கிய அதிகாரிகள் இல்லாததால் சொத்து வரி வசூல், உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஆவடி மாநகராட்சியில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நகர மைப்பு அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. செயற்பொறியாளர் அந்தஸ்தில் உள்ள மாநகராட்சி பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. ஆவடி மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், மண்டல அலுவலர் நியமிக்கப்படவில்லை. இந்த 4 மண்ட லங்களுக்கு 4 செயற்பொறியாளர், 4 உதவி செயற்பொறியாளர்கள், 4 உதவி பொறியாளர்கள், 4 நகரமைப்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். 4 துப்புரவு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பல மாதங்கள் ஆகியும் நியமிக்கப்படவில்லை. அதேபோல், மறைமலைநகர் நகராட்சியில் 2 வருடமாக மேலாளர், கணக்காளர் இல்லை. இப்படி தமிழ்நாடு முழுவதும் நகராட்சியில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் இல்லை. எனவே உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.