திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி யில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக் கட்டடம் பழுதடைந்த தால் இடிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் அந்த பள்ளிக்கு புதிதாக கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட வில்லை. இதனால், மரத்தடியில்தான் 1,200க்கும் மேற் பட்ட மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி மிக விரைவில் புதியக் கட்டடம் கட்டப்படுமா? என்று திமுக உறுப்பினர் ஆண்டி அம்பலம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் செங்கோட்டையன், “நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கி விரைவில் கட்டடம் கட்டிக்கொடுக்கப்படும்” என்றார்.