tamilnadu

img

கண்மாய்க்குள் நடந்து சென்று சடலத்தை புதைக்கும் அவலம்

சிவகங்கை, நவ. 11-  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கீழாயூர் காலனியில்  பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினருக்கு மயான வசதி இல்லாததால் கண்மாய் தண்ணீருக்குள் நீந்தி சென்று தனியார் இடத்தில் சடலத்தை புதைக்கும் அவல நிலை தொடர்வதாக பட்டியலின மக்கள் தெரிவிக்கிறார்கள்.  கீழாயூர் காலனி அழகன் மகன் நாதஸ்வர கலைஞர் சிவராஜ் உயிரிழந்தார். வெள்ளி யன்று அவரது சடலத்தை கண்மாய்க்குள் இறங்கி சென்று தனியார் இடத்தில் புதைத்தனர்.  மயான வசதியை இளை யான்குடி வட்டாட்சியர் செய்துதர ேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.