புதுதில்லி, மே 14- வாக்காளர்பட்டியலுடன் ஆதாரை இணைப்பது தொடர் பான விதிகளை அரசு விரைவில் வெளியிடும். ஆதார் விவரங்க ளைப் பகிர்வது வாக்காளர்களின் விருப்பம் தான் என்றாலும் ஆதார் அட்டையை இணைக்காததற் கான போதுமான காரணம் அவசி யம். இணைக்காதவர்கள் போது மான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சுஷில் சந்திரா, செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய நிலவரப்படி, ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யலாம். ஜனவரி 2-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஓராண்டு காத்திருக்க வேண்டும். புதிய விதி களின்படி, இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் நான்கு வெவ் வேறு தேதிகளில் வாக்காளர்களாகப் பதிவு செய்ய முடியும். ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் எனக் கேட்ட தற்கு பதிலளித்த சுஷில் சந்திரா, இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே வரைவு முன்மொழிவுகளை அனுப்பிவிட்டோம். நாங்கள் (தேர்தல் ஆணையத்தின்) தகவல் தொழில்நுட்ப அமைப்பையும் மேம்படுத்த வேண்டும் என்றார் ஆதார் விவரங்களைப் பகிர்வது வாக்காளரின் தனிப்பட்ட விருப்பம் தானே எனக் கேட்டதற்கு பதிலளித்த சுஷில் சந்திரா, ‘‘இது சுயவிருப்பம்தான். ஆனால் வாக்காளர்கள் தங்களின் ஆதார் அட்டைகளை இணைக்காததற்கு போதுமான கார ணத்தைக் கூற வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பது வாக்காளர் பட்டியலை செழுமைப்படுத்த தேர்தல் ஆணை யத்திற்கு உதவும்’’ என்றார். ஆதாரை இணைக்கும் திட்டத் துக்கு எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.