tamilnadu

img

நகர்மயமாதல் சாதிய பாரபட்சங்களை ஒழிக்குமா?

‘கிராமங்களில் தான் சாதிக்கொடு மைகள் தலைவிரித்தாடுகின்றன - நகரங்களில் அப்படிப்பட்ட பிரச்சனைகள் எது வும் கிடையாது’ என்ற கருத்து சமூகத்தின் பல ரிடமும் இருக்கிறது. ஆனால், இக்கருத்தை பொய்யாக்கும் ஏராளமான விபரங்கள் நாம் நடத்திய கள ஆய்வுகளில் வெளிவந்திருக் கின்றன. நகரங்களில் தலித் மக்கள் ஏராள மான சாதிய பாரபட்சங்களையும், வேதனை களையும் சந்திக்கிறார்கள். மதுரை மாநகரில் 2009இல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வுகள் இதுகுறித்து ஏராளமான விபரங்களை நம்முன் கொட்டு கின்றன. கிராமங்களை விட நகரப்புறங்களில் தலித் மக்கள் அனுபவிக்கும் பாரபட்சங்களும், வேதனைகளும் அதன் வடிவிலும் தன்மை யிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அவை இருப்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் 3000க்கும் மேற்பட்ட கிரா மங்களில் 2008ல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வின் விபரங்களை முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இதன்பிறகே நகர்ப்புறங்களில் தலித் மக்க ளின் சமூகப் பொருளாதார நிலை குறித்து ஆய்வுகள் நடத்த முடிவு செய்தோம். இதற்காக முதலில் மதுரை மாநகரை தேர்வு செய்தோம். 2009ம் ஆண்டு இத்தகைய ஆய்வு கள் நடந்தன. 100க்கும் மேற்பட்ட தோழர்களும், நண்பர்களும் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட் டார்கள். இதன் விபரங்களை 2009 டிசம்பர் 18இல் பத்திரிகைகளுக்கும், இதர ஊடகங் களுக்கும் செய்தி அறிக்கையாக வெளியிட் டோம். பரவலான பத்திரிகைகளும், ஊடகங் களும் இதனைச் செய்தியாக வெளியிட்ட போது பலரும் வியப்படைந்தார்கள். குறைந்தபட்ச அத்தியாவசிய தேவைகள் கூட உறுதி செய்யப்படாத பகுதிகள்,  தலித் மக்கள் குடியிருப்புகளாக உள்ளன என்பது அந்த ஆய்வில் வெளிவந்தது. உதாரணமாக கிருதுமால் நதி, கோமஸ் பாளையம் போன்ற பகுதிகளை குறிப்பிடலாம். கிருதுமால் நதி என்றால் ஏதோ நதி அல்ல, அதுவும் ஏறத்தாழ சாக்கடை நீர்தான்.

இந்த ஆய்வு அறிக்கையை “பிரன்ட் லைன்” இதழ் கட்டுரை யாளர் மறைந்த துரைராஜ் கையோடு எடுத்துச் சென்று புகைப்படங்களுடன் அப்பகுதிகளின் காட்சிகளை பதிவு செய்தார். கிருதுமால் நதியின் ஓரத்தில் நடுத்தர மக்கள் வாழும் பகுதி யின் பக்கம் துர்நாற்றத்திலிருந்து தப்ப பெரும் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. ஆனால் எளிய தலித் மக்கள் வாழும் மறு பக்கம் அத்தகைய சுவர் இன்றி இருந்ததும் ஆய்வில் வெளி வந்தது. அப்பகுதி மக்கள் துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வாழும் பகுதி யின் சுகாதார சீர்கேட்டால் திருமண சம்பந்தங்  கள் கூட கை கூடுவதில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவலை ஆய்வின்போது அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  போதுமான சுகாதார வசதிகளுமின்றி ஆரோக்கியமற்ற சூழலில் அவர்கள் பரவலாக வாழ்கிறார்கள். மேலும் தலித் குழந்தைகளுக் கான கல்வி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், சுய வேலைக்கான பொருளாதார உதவி, போக்குவரத்து வசதி, முதியோர் பென் சன் உட்பட நலத்திட்ட உதவிகள் ஒவ்வொன் றும் அவர்களைச் சென்றடைவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக் கும் மேலாக அவர்கள் மதுரை மாநகரில் வாழ்ந்து வருகிற போதிலும் அவர்கள் வாழும் இடத்திற்கான நிலப்பட்டா பெருவாரி யானவர்களுக்கு கிடைக்கவில்லை. துப்புரவு  பணிகளிலும், மயான பணிகளிலும், காலணி கள் தைக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ள அருந்ததியர் மக்களின் சமூகப்பொருளாதார வாழ்நிலை சொல்லி மாளாது. பல்வேறு தலித் பிரிவினர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களில் பணி புரிபவர்கள் என அனைவருமே தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வு முடிவு களை சரியானவை என ஏற்றுக் கொள்கின்ற னர். மதுரை மக்கள் தொகை சுமார் 20 லட் சத்தை ஒட்டி இருக்கும்.  இதில் 10 சதவிகிதம் பேர் பல்வேறு தலித் பிரிவினர் ஆவர். இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டு களையும், இந்திய அரசியல் சாசனம்  உரு வாகி 72 ஆண்டுகளையும் கடந்துள்ள நிலை யில் சட்டப்பூர்வமாக அனைத்து பிரிவினருக் கும் சமூக, சமத்துவம் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. ஆனால், உண்மையான நிலையும் மனித நேயமுள்ளவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் தரக்கூடிய பிரச்சனையும் எதுவென்றால் இதர பகுதி மக்களிடமிருந்து தனியே பிரித்து வைக்கப்பட்டு தலித் மக்களின் வாழ்விடங்கள் அமைந்திருப்பது தான். மதுரை மாநகரில் அருள்தாஸ்புரம், செல்லூர், முனிச் சாலை, திடீர் நகர், சாத்தமங்கலம், அனுப்பா னடி, வில்லாபுரம், மஞ்சள்மேடு காலனி, கரும்பாலை, சுப்பிரமணியபுரம், அம்பேத்கர் காலனி, கீழ்மதுரை, கல்மேடு, சிம்மக்கல் காலனி, மீனாட்சிபுரம், பந்தல்குடி உள்ளிட்டு நகரின் வேறு சில வார்டுகளிலுமாக 19 குடிசைப் பகுதிகள் உள்ளன. மதுரை மாநகரில் தலித் மக்கள் சமீப காலத்தில் குடியேறியவர்கள் அல்ல. 16ஆவது, 17ஆவது நூற்றாண்டு காலத்திலேயே- அதா வது மன்னர்கள் காலத்திலேயே மேலவாசல், கீழவாசல், தெற்குவாசல், வடக்கு வாசல் நகர் பகுதிகளுக்கு வெளியே தலித் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இதனை பல வரலாற்றியல் ஆசிரியர்களும் உறுதி செய்கின்றனர். தற் போது, நகர் வளர்ச்சியின் காரணமாக இப் பகுதிகள் பிரதான இடங்களாக மாறியுள்ளன. 16ஆவது நூற்றாண்டு காலத்திலேயே அருந்த தியர் மக்களும் மேற்கண்ட நகர் பகுதிகளில் வாழ்ந்துள்ளனர் என வரலாற்றியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பழங்காநத்தம் அருகில் தலித் மக்களுக்கு என தனி மயானம் 16வது நூற்றாண்டில் இருந்தது என்பதை பழைய வரு வாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்யும் போது தெரிய வருகிறது. மதுரை மாநகரில் தலித் மக்களில் மிக கணிச மானவர்கள் கடும் உடலுழைப்பாளிகள். சுமை தூக்கும் தொழிலாளர்களில் ஒரு பகுதி மற்றும் ஆட்டோ ஓட்டுபவர்கள், பயணம் செய்து பொருள் விற்பவர்கள் - இவர்களில் கணிசமான வர்கள் தலித்துகள் ஆவர். துப்புரவு பணியாளர் களில் கணிசமானவர்கள் அருந்ததியினர். இந் திய சாதி அமைப்பின் மிகவும் அடித்தட்டில் இருப்பவர்கள் அருந்ததியர்கள். இதுதான் மதுரை மாநகர கணிசமான தலித் மக்களின் அன்றாட வாழ்நிலை. இட ஒதுக்கீடு காரணமாக கல்வி, வேலை வாய்ப்பு பெற்ற ஒரு பகுதி தலித் மக்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர் களாக இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற் கில்லை. குடிசை பகுதிகளில் பலதரப்பட்ட ஏழை எளிய மக்கள் வசிக்கிறார்கள் என்ற போதிலும் தலித் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்குப் புறமான தெருக்களில்தான் வாழ்கிறார்கள்.

தலித் மக்களுக்கு இருப்பிடங்கள் ஒதுக்கப்படும் போது, அவர்கள் தங்கள் சாதிப் பிரிவினர் வாழும் இடங்களின் அருகிலேயே இடம் தர கோருகின்றனர். தங்கள் சாதிப் பிரிவினர் கள் வாழும் இடங்களுக்கு அப்பாற்பட்டு வாழ் வது பாதுகாப்பற்றது எனக் கருதுகின்றனர். நகர்மயமாதல் பரவலாக நடைபெற்று வருகிற போதிலும் இம்மாறுதல் தலித் மக்களிடையே உள்ள பாதுகாப்பற்ற உணர்வை போக்க வில்லை. சரியான வார்த்தைகளில் கூறுவதென் றால் நகர்மயமாதல் என்பது தலித் மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் எந்த அற்புதத் தையும் நிகழ்த்தவில்லை. தலித் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரக் கேடுகள், குடிநீர் பற்றாக்குறை, கடுமையான ஜனத்திரள் நெருக்கம், போது மான உள்கட்டமைப்பு வசதி இல்லாமை போன்றவை பெரும் பிரச்சனைகளாக இருக் கின்றன. குடிசைப் பகுதிகள் ஏழை எளிய மக்களுக்கு தகுதி படைத்ததாக இருக்க வேண்டுமென அதற்கான விதிகள் கூறு கின்றன.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வாழ்விடங்கள் பற்றிய விதிகள் கீழ்க்கண்ட பகுதிகளை மக்கள் வாழத் தகுதியற்றவை என நிர்ணயித்துள்ளன.
1)    எந்தவிதத்திலும் மனிதர்கள் வாழ முடியாத இடங்கள்
2)    அதீதமான மக்கள் திரள், கட்டிட உள்கட்டமைப்பு போதாமை, நெருக்கமான, மிக குறுகலான தெருக்கள், காற்றோட்ட வசதியின்மை, பாதுகாப்பற்ற மனநிலை மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் எத்தகைய சூழலும்
ஆனால், தலித் மக்களின் வாழ்விடங்கள் இதற்கு மாறான நிலையில்தான் இருக்கின்றன. குடிசைப் பகுதிகளில் அமைந்துள்ள எல்லா தெருக்களுமே மிக குறுகலாக இருக்கின்றன என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒரே ஒரு அறை 10x10 அடி கொண்ட தாகவே உள்ளன. இந்த அறையில் 10 பேர் வரை வாழ வேண்டிய நிலைமையும் உள்ளது. குறிப்பாக, அருந்ததியர் மக்கள் அவர்களின் வாழ் நிலை காரணமாக இணைந்த குடும்பமாக (Joint Family) வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடு களில் இட நெருக்கடி கடுமையாக உள்ளது. தலித் அல்லாத இதர பிரிவு மக்களை பொறுத்தவரை அவர்களில் ஒரு பகுதி யினரும் குடிசை பகுதிகளில் வாழ்வதும், நேருகின்ற துயரங்களை எதிர்கொள்வதுமான நிலை உள்ளது என்றபோதிலும், அவர்கள் சமூக (சாதி) ரீதியாக உயர் அந்தஸ்தில் இருக் கிறார்கள். அவர்கள் வாய்ப்பு ஏற்பட்டால் தங்கள் குடியிருப்பை இதைவிட கூடுதல் வசதியுடன் கூடிய பகுதிகளுக்கு மாற்றிச் செல்வதில் சாதி ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தலித் மக்கள் அவ்வாறு மாறிச் செல்ல விரும்பினால் அது அவ்வளவு சுலபமானதல்ல. காரணம், தலித் அல்லாத மக்கள் தங்கள் குடியிருப்புகளை தலித் மக்க ளுக்கு விற்பதிலோ அல்லது வாடகைக்கு தருவ திலோ மிகப்பெரிய தயக்கத்தையும், எதிர்ப்பை யும் வெளிப்படுத்துவார்கள். நன்கு கட்டமைக்கப் பட்ட மற்றும் குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய வீடுகளின் விலை தலித் மக்கள் வாங்க முடி யாத நிலையில் இருக்கும். ஆனால் தலித் மக்க ளுடைய நிலம் அல்லது வீடுகளின் விலை தலித் அல்லாத மக்களின் நிலம் அல்லது வீடுகளின் மதிப்பைவிட குறைவானதாகவே இருக்கின்றன. தல்லாகுளத்தில் அருகருகே உள்ள வீட்டு மனை விலைகள் தலித் மக்களும், தலித் அல்லாத மக்களும் வாழும் பகுதிகளில் பெரும் வித்தியாசத்துடன் இருந்ததை ஆய்வு வெளிக் கொண்டு வந்தது.

நிதி சிரமத்திற்கு ஆளாகக் கூடிய தலித் மக்கள் அதற்கு தீர்வு காண சந்தைக்கு போனால் அடி மாட்டு விலைக்கு மனைகள் பேரம் பேசப்படுகிற யதார்த்தம் முகத்தில் அறைவதாக இருந்தது. இப்படி எல்லாம் உள்ள பாராபட்சங்களை பொதுச் சமூகம் உணராமலேயே கடந்து செல் கிறது என்ற குரூரமான உண்மையை மதுரை மாநகர் கள ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த  ஆய்வு அறிக்கையை கைகளில் வைத்துக் கொண்டு “பிரன்ட் லைன்” துரைராஜ் நேரடியாக அப்பகுதிகளுக்கு வருகை தந்து அத்தகவல் களின் மெய்த் தன்மையை உறுதி செய்து எழுதிய கட்டுரை “Hidden Apartheid” (ஒளிந் திருக்கும் ஒதுக்கல்) என்ற தலைப்பிலான 26.02.2010 இதழ் கட்டுரை குறிப்பிடத்தக்கது. கரும்பாலை குடிசைப்பகுதிக்கு உட்பட்ட எஸ்.எம்.காலனி, பி.டி.காலனி, இந்திரா நகர் ஆகியவை உள்ளன. இப்பகுதிகளில் 2000 பேர் வரை வசிக்கிறார்கள். இவர்களில் மிக கணிசமானவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிற போதிலும், இவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இங்குள்ள பலரும் தங்கள் வீடுகளுக்குள் போதுமான இட வசதி இல்லாததால் வீட்டிற்கு வெளியே வைத்து சமையல் செய்கின்றனர். பலர் சில பெரியவர்களுடன் சேர்த்து தங்களுடைய குழந்தைகளை வீட்டிற்கு வெளியே இரவில் தூங்க வைக்கின்றனர். இங்குள்ள மிக குறுக லான தெருக்கள் குளிப்பிடமாகவும் பயன் படுத்தப்படுகின்றன. வீடுகளைச் சுற்றி ஓடும் சாக்கடைகளால் கொசுத் தொல்லை தாங்க முடிவதில்லை. மழைக் காலங்களில் சாக்கடை நீர் குடிநீருடன் பல சந்தர்ப்பங்களில் கலந்து விடுவதாகவும் அவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். நகர்மயப்படுத்தப்பட்டு வரும் 15 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிப்ப தாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக குடிசைகளில் வாழ்பவர்களும் குறிப்பாக தலித் மக்களும் இதில் கடுமையாக பாதிக்கப் படுபவர்களாக உள்ளனர்.

இவர்களது குடிசை கள் அப்புறப்படுத்தப்படுவதும் இவர்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் இல்லாத, ஏற்கனவே பார்த்து வரும் வேலைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் மாற்று இடங்கள் வழங்கப்படுவதும் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மதுரையில் தொடர்ந்து தலித் பகுதி மேம்பாட்டில் காண்பிக்கும் அக்கறை குறிப் பிடத்தக்கது. தோழர் மோகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் திடீர் நகர் மக்கள் அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத வில்லாபுரம் பகுதிக்கு மாற்றப்பட்ட போது உட னடியாக தலையிட்டு மக்களோடு துணை நின்றது போன்ற பல நிகழ்வுகளை இங்கு குறிப்பிட முடியும். தற்போது தோழர் சு. வெங்கடேசன் நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலித் மக்கள் வாழ் பகுதி மேம் பாட்டுக்கு ஒதுக்கீடு செய்வதில் வலுவான கவனம் செலுத்தி வருகிறார். மேலவாசல், மஞ்சள் மேடு, மகபூப்பாளையம் கோவில் பிள்ளை காலனி, கரும்பாலை பிடி காலனி ஆகிய பகுதி களில் சமூக நலக் கூடம் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ 75 லட்சம் வரை ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாநகரில் பணியாற்றுகின்ற சுகாதாரப் பணி யாளர்களின் மொத்த எண்ணிக்கை தேவையை விட குறைவானதாகவே உள்ளது. ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகளின்படி 400 பேருக்கு ஒரு சுகாதாரத் தொழிலாளி என நியமிக்க வேண்டும். இதன்படி பார்த்தால் 5000க்கும் மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் பணியாற்ற வேண் டும். நிச்சயமாக அந்த எண்ணிக்கையில் சுகா தாரத் தொழிலாளர்கள் பணியாற்றவில்லை. குறைவான தொழிலாளர்களே பணியாற்று கின்றனர்.

பணியாற்றும் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் அருந்ததியர்களே. இவர் களுக்கு போதுமான மாநகராட்சி சுகாதாரப் பணி கிடைக்காதபோது பெரிய ஹோட்டல்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களில் மிகக் குறைவான கூலிக்கு இவர்கள் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அடுத்து தலித் மக்களின் கல்வி - குறிப்பாக அருந்ததியர் குழந்தைகள் கல்வி பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மொத்த அருந்ததியர் குழந்தைகளில் 96 சதவீதம் மாநகராட்சி பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்கின்றனர். இதுவே அவர்கள் ஐந்தாம் வகுப்பு செல்லும்போது 60 சதவீதமாகவும், எட்டாம் வகுப்பு செல்லும்போது 45 சதவீதமாக வும், பத்தாம் வகுப்பு செல்லும்போது 20 சத மாகவும் குறைந்துவிடுகிறது. மிகக் குறை வான அருந்ததியர் குழந்தைகளே பன்னிரண் டாம் வகுப்பிற்கும், கல்லூரி படிப்பிற்கும் செல் கின்றனர். துப்புரவு பணிகளில் ஈடுபடும் அருந்த தியர் மக்களின் வேலை நேரம் மற்றும் வேலைத் தன்மை காரணமாக அவர்களின் குழந்தைகள் கல்வியை கவனிக்க போதுமான நேரம் இருப்பதில்லை. மேற்கண்ட நிலைமைகள் மதுரை மாநகரை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, சென்னை உள்பட அனைத்து பிரதான நகரங்களின் நிலை மையும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகவே உள்ளது. அரசு நிர்வாகம், தலித் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் தனி கவனம் செலுத்துவது நியாயப் படியும், சட்டப்படியும் அவசியமான ஒன்று. ஆனால், தனிக்கவனம் செலுத்துவது இருக் கட்டும் - இதர பகுதிகளுக்கு காட்டுகின்ற அளவுக் கான கவனம் கூட தலித் பகுதிகளுக்கு அரசு நிர்வாகம் காட்டுவதில்லை.

அதிகார வர்க்கத் தின் பாரபட்சமான அணுகுமுறையை இங்கு காண முடிகிறது. மாநகர்களில் கணிசமான உயர் சாதியினர் குடியிருக்கும் பகுதிகளிலோ, அடுக்குமாடி கட்டிடங்களிலோ தலித் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் சிரமமான ஒன்றுதான். ‘உயர்’ சாதியினர் வீடுகளில் வீட்டுவேலை செய்யும் தலித் உழைப்பாளி பெண்களை சமையலறை மற்றும் பூஜை அறைக்குள் அனு மதிப்பதில்லை என்ற நிலையும் பல பகுதிகளில் உள்ளது. இவர்களது பிரதானமான வேலைகள் துணி துவைப்பது, வீடு மற்றும் குளியலறை, கழி வறைகளை சுத்தம் செய்வது போன்றவைதான். சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், பாரபட்சங் களுக்கும் எதிரான சமூக சீர்திருத்த இயக்க மும், பிரச்சாரமும் கிராமப்புறங்களை மட்டு மல்ல, நகர்ப்புறங்களையும் இணைத்து வலுவாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. அகில இந்திய நிலைமைகள் மட்டுமல்ல, வலு வான சமூக சீர்திருத்த இயக்கம் நடைபெற்ற தமிழக நிலைமையும் இத்தகைய தேவைக்கு அப்பாற்பட்டதாக இல்லை.