tamilnadu

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி விரைவில் துவங்குமா?

சீர்காழி. மார்ச் 11 - கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி விரைவில் துவங்குமா என விவசாயிகள் எதிர்பார்த்திருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டி மகேந்திரப்பள்ளி, காட்டூர், திட்டு படுகை, நாதல்படுகை, சந்த படுகை, முதலைமேடுத்திட்டு, முதலைமேடு, அனுமந்தபுரம், அளக்குடி, பில் படுகை, ஆச் சாள்புரம், குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கீரங்குடி, சிதம்பரநாதபுரம், சோதியக்குடி, கொன்னகாட்டுபடுகை, பாலுரான்படுகை, மாதிரவேளூர், வடரங்கம், மேலவாடி, சென்னிய நல்லூர், பூங்குடி, பனங்காட்டான் குடி, வடரங்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயி கள் நெற்பயிர், பயறுவகை பயிர், கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட தோட் டப் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் மல்லிகை, முல்லை, காக்கட்டான், ரோஜா உள்ளிட்ட பூ செடிகளும் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக கொள்ளிடம் ஆற்றுக்குள் சுமார் 15 கி.மீ தொலைவில் உப்பு நீர் புகுந் துள்ளது. ஆற்று நீர் உப்பு நீராக மாறி வருவதால் கரையோரம் உள்ள விளை நிலங்கள் உவர் நிலமாக மாறி வருவதுடன் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு வரு டங்களுக்கு முன்பு கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே சந்தபடுகை மற்றும் பேராம் பட்டு கிராமத்துக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணை கட்டுவதற்கு முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால் அந்த முயற்சி திடீரென நிறுத் தப்பட்டு மாதிரவேளூர் கிராமத்துக்கும் கருப்பூர் கிராமத்துக்கும் இடையே கொள்ளி டம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கு  மண் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டன. கத வணை கட்டும் பணியை இதுவரை துவங்க வில்லை. கதவணை கட்டுவதன் மூலம் கொள் ளிடம் ஆற்றில் உப்புநீர் உள்ளே புகுவதை தடுக்க முடியும். விளை நிலங்களையும் பாதுகாக்க முடியும். போதிய குடிநீரும் கிடைக்கும்.  எனவே குறிப்பிடப்பட்ட மாதிரிவேளூர் கிராமத்தில் விவசாயிகளின் நலன் கருதி கதவணை கட்டும் பணியை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.