கோவை, பிப்.1- கொரோனா பரவல் அச்சம் காரணமாக, சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முதி யோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்க ளுக்கு, அஞ்சல் வாக்கு செலுத்தும் வசதி செய்து தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 21.55 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள னர். தமிழகத்தில் கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தபடியே, அஞ்சல் மூலம் வாக்குகளை செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, கொரோனா 3-வது அலையின் தாக்கம் உள்ளது. மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரு கிறது. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, அஞ்சல் வாக்குகள் செலுத்த அனுமதிப்பது தொடர்பாக இதுவரை எவ்வித உத்தரவும் வரவில்லை என்றனர்.