சிதம்பரம் இரவிசந்திரன்
“நாங்கள் எங்கே செல்வது? இது எங்களுடைய மண். சிவிங்கிப் புலியையோ சிங்கத்தையோ கொண்டு வந்து கொள்ளுங்கள். எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து விடுங்கள். எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்”. குனோ (Kuno) தேசியப்பூங்காவில் சிவிங்குப் புலிகளைக் கொண்டு வந்ததால் குடியிறக்கப்பட்ட ஆதிவாசிகளில் ஒருவரான குப்தாவின் வார்த்தைகள் இவை.
வீடு வாசல் இழக்கும் மக்கள்
இங்கு உள்ள கடைசி ஆதிவாசி கிராமம் பாக்ஜா. ஆப்பிரிக்கா நமீபியாவில் இருந்து சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டதால் சஹரியா இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் இங்கு வாழ்ந்து வந்தனர். தங்களுக்கு வழங்கப்படவேண்டிய உரிய நஷ்ட ஈடு கொடுக்கப்படவில்லை என்று இவர்கள் கூறுகின்றனர். இது தவிர நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டிய குடும்பங்களின் பட்டியலில் இருந்து பாரம்பரியமாக இங்கு பல காலங்கள் வாழும் 70 குடும்பங்கள் நீக்கப்பட்டுள்ளன.
நான் உயிருடந்தான் இருக்கிறேன்
19 வயதான ராம் பாபு என்ற இளைஞன் உயிருடன் இருக்கும்போதே இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளார். “நான் ஆரோக்கியத்துடன் உயிருடன் இருக்கி றேன்” என்ற சான்றிதழிற்காக இவர் இப்போது அலைந்து கொன்டிருக்கிறார். தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்துவரும் குடும்பமே இவரது குடும்பம்.
புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?
2014இல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள்படி இந்த கிராமத்தில் 560 பேர் உள்ளனர். 1981ல் கிர் தேசியப் பூங்காவில் இருந்து ஆசிய சிங்கங்களை இங்கு கொண்டு குடியமர்த்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து 1998-2003 காலத்தில் இப்பகுதியில் இருந்து 24 ஆதிவாசி கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. குஜராத் அரசின் எதிர்ப்பு மூலம் அப்போது அந்தத் திட்டம் நடைபெறவில்லை. அடிப்படை வசதிகளை செய்து தந்த குனோ பூங்கா சிவிங்கிப்புலி களுக்கு வாழச்சரியான இடம் என்று கண்டறியப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகளை இங்கு கொண்டு வந்து வாழவைக்கும் திட்டத்தில் குனோ முதலிடம் பெற்றது. சிங்கங்கள் பிறகு இங்கு கொண்டு வரப்படவில்லை என்றாலும் இப்போது இப்பகுதியை தேசியப் பூங்காவாக மாற்றும் தீவிர முய்ற்சிகள் வேகமாக நடந்துவருகின்றன.
இது எங்கள் பூர்வீக வாழிடம்
“இங்கு வாழ்ந்து சாகவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்களை இங்கு இருந்து வெளியேற்றினால் நாங்கள் என்ன செய்வது?”. கிராமவாசியான கல்லோ தேசிய ஊடகங்களிடம் கூறினார். காட்டில் இருந்து கிடைக்கும் வனப்பொருட்களைச் சேகரித்தே இவர்கள் வயிற்றுப்பிழைப்பை நடத்துகின்றனர்.
கேள்விக்குறியாகிவிட்ட வாழ்க்கை
“வேறு இடத்திற்கு குடிபெயரச் செய்யும்போது முன்னோக்கி இருக்கும் வாழ்க்கையை எப்படி வாழ்வது?” இவர்களுக்குத் தெரியவில்லை. உரிய நஷ்ட ஈடு கிடைக்கா மல் வாழ்க்கை இவர்களுக்கு முன்னால் பெரிய கேள்விக்குறி. 1952இல் இந்தியாவில் சிவிங்கிப்புலிகளுக்கு இன அழிவு ஏற்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறி விக்கப்பட்டது. 70 ஆண்ண்டுகளுக்கு பிறகு நமீபியாவில் இருந்து இப்போது இவை இந்தியாவிற்குக் கொண்டுவரப் பட்டுள்ளன.
சூழலியலாளர்களின் அச்சம்
பல பிரபல சூழல் நிபுணர்களும் இந்தியாவில் இவை வாழ உகந்த சூழல் இல்லை. முறைப்படியான ஆய்வுகள் இது பற்றி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிவரும் நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இப்பகுதி ஆதி வாசிகளுக்கு எப்போது எப்படி யார் புதுவாழ்வு தரப்போவது?