tamilnadu

img

750 மருந்தாளுநர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?  

மதுரை, ஆக.16- மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அடுத்த மூன்று  மாதங்களுக்கு அனைத்து நோய்களுக்கும் தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர்  டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரையில் ஞாயிறன்று கொரோனா தடுப்பு சிகிச்சை முகாமை துவக்கி வைத்த  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மதுரையில் மட்டுமல்ல, தமிழகத்தில் தொற்றுப்பரவல் குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா தொற்றால் இறப்போர் ஆறு அல்லது ஏழு பேர் தான் இருப்பர். மற்ற இணை நோய்களால் இறப்போர் எண்ணிக்கை அதிகம். இணைநோய்களால் இறப்போரையும் கொரோனா பட்டிய லில் சேர்ப்பதால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஒரு ஊரில் ஒரு இடத்தில் 100 பேருக்கு தொற்று  பாதிப்பு இருப்பதாக கண்டறியப் பட்டால். அங்கு பத்து மடங்கு அள விற்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோ னாவால் குணமடைந்து ஒருவர் வீடு சென்றாலும் 7,14,28 நாட்கள் என்ற அடிப்படையில் அவரது ரத்தமாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் 750 மருந்தாளு நர் பணியிடங்கள் கடந்த இரண்டா ண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதே என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, இது குறித்து சென்னை அலுவலகம் சென்றபின் அதன் நிலை குறித்து பார்ப்பதாகக் கூறினார்.