சென்னை,ஜன.25- கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதி களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பேருந்துகளின் பின்புறம் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் சாய்தளம் பாதை அமைக்க முடியுமா என்பது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து பொறியாளர்காளிடம் ஆலோசித்து தெரிவிக்கும் படி அரசு தரப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்த ரவிட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், “பேருந்தின் பின்புறம் சாய்தளப் பாதை அமைப்பதால் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்படும். அதேசமயம் 900 மற்றும் 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை விற்பனை செய்ய உற்பத்தி நிறு வனங்கள் தயாராக உள்ளன. ஆனால், 400 மில்லி மீட்டர் உயரத்திலான தாழ்தள பேருந்துகளை விற்பதற்கு ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக இருக்கிறது. மற்ற பேருந்து நிறுவனங்கள் இவ்வகை பேருந்துகளை இதில் ஆர்வம் காட்டவில்லை. 900 மில்லி மீட்டர் உயரம் கொண்ட பேருந்து களாக இருந்தால் லிஃப்ட் வசதி அமைக்க முடியும். 650 மில்லி மீட்டர் உயர முடைய பேருந்தாக இருந்தால் சாய்தள வசதியை அமைக்க முடியும். மேலும் பேருந்து கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், இரு வகையான பேருந்து களும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏது வாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்க அரசு தரப்புக்கு உத்தர விட்டனர். மேலும், தாழ்தள பேருந்துகள் வரும் நேரத்தை தெரி விக்கும் செயலியை அறி முகப்படுத்தவும் அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.