tamilnadu

குழந்தைகள் இயக்கத்திற்கும், குழந்தைகள் ஸ்தாபனத்திற்கும், என்ன அவசியம் - - நதேழ்தா குரூப்ஸ் கயா -

குழந்தைகள் இயக்கத்திற்கும், குழந்தைகள் ஸ்தாபனத்திற்கும், என்ன அவசியம் என தோழர்கள் கேட்கலாம். குழந்தைகள் அமைப்பாக கூடும் போது, கூட்டுணர்ச்சியை  புகட்டுகிறது. இன்பத்தையும், துன்பத்தையும் கூட்டத்துடன் பகிர்ந்து கொள்ள பழக்குகிறது. கூட்டத்தின் நலனே தங்களின் நலன் என போதிக்கிறது. கூட்டாக வேலை செய்யும் திறமை, இயங்கும் திறமையை வளர்க்கிறது. தாங்கள் மனிதகுலத்தின் மலர்ச்சிக்காக போராடும் தொழிலாளி வர்க்கத்தின் உறுப்பினர்கள், சர்வதேச பாட்டாளி வர்க்கம் என்ற மாபெரும் சேனையின் உறுப்பினர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, குழந்தைகளின் மனவுணர்வை பண்படுத்துகிறது.