சென்னை, ஏப்.15- சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக உள்ளது என்று அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறையின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தமிழ்நாடு அரசு, இம்மாநிலத்தில் வாழும் சிறுபான்மை யினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி யாக உள்ளது” என்றார். சமமான வாய்ப்பை வழங்கு வதன் மூலமும், அவர்களின் சட்டப் பூர்வ உரிமைகளை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்த அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.
பல்வேறு பிரிவினரிடையே மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. சிறு பான்மையினர் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். தொடர்ந்து புதிய அறிவிப்பு களை வெளியிட்ட அமைச்சர், “ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான் மையினருக்கு 2 ஆயிரத்து 500 மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் விலையில்லாமல் அளிக்கப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுடைய குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை அளிக்கப் படும். உறுப்பினர்கள் விபத்து மரணத்துக்கான உதவித் தொகை ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்” என்றார். சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் தொடங்கப்படும். கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கப்படும். சொந்தக் கட்டடத்தில் இயங்கும் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு சிறப்புப் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிறுபான் மையினர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு சொந்தக் கட்டடம் கட்டப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.