திருச்சிராப்பள்ளி, ஜூலை 11 - தீக்கதிர் நாளிதழின் திருச்சி பதிப்பு பொது மேலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான எஸ்.பன்னீர் செல்வம் காலமானார் என்பதை துயரத்துடன் தெரி வித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 68. தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளராக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தோழர் எஸ்.பன்னீர்செல்வம், சமீப கால மாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயி றன்று இரவு, சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் காலமானார்.
அவரது உடல், கட்சியின் திருச்சி மாவட்டக்குழு அலுவலகமான வெண்மணி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. திருச்சி மாநகர், புறநகர் மற்றும் பல்வேறு மாவட் டங்களிலிருந்து ஏராளமான தலைவர்கள், தோழர்கள், கட்சி ஊழியர்கள், தீக்கதிர் ஊழி யர்கள் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி னர். கட்சியின் மாநில செயற்குழு சார்பில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி மற்றும் தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.ஸ்ரீதர், ஐ.வி.நாகராஜன், எம். சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலா ளர்கள் ஆர்.ராஜா, எம்.ஜெயசீலன், வி.மாரி முத்து, சின்னை பாண்டியன், எஸ்.கவி வர்மன், பி.சீனிவாசன், ரமேஷ், இளங்கோ, ஜோதிபாசு, மாதர் சங்க மாநிலத் தலை வர் எஸ்.வாலண்டினா, தீக்கதிர் பொறுப்பா சிரியர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், எம்.கண் ணன், பொது மேலாளர்கள் எஸ்.மாணிக்கம், ஜோ.ராஜ்மோகன், உஷா மற்றும் மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், ஜி.ரத்தின வேலு, வி.பரமேசுவரன், எஸ்.திருநாவுக் கரசு, சி.கல்யாணசுந்தரம் உள்பட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரங் கல் கூட்டத்தில் தலைவர்கள் பேசினர். கோணக்கரை மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
சிபிஎம் மாநில செயற்குழு அஞ்சலி
தோழர் எஸ்.பன்னீர்செல்வம் மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் மாநில செயற்குழு அதிர்ச்சியும், துயரமும் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தீக்கதிர் திருச்சி பதிப்பின் பொதுமேலா ளர் தோழர் பன்னீர்செல்வம் (வயது 68) நுரை யீரல் நோய் பாதிப்பினால் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பல னின்றி ஜூலை 10 அன்று இரவு உயிரி ழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை யளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறது.
தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்த தோழர் பன்னீர்செல்வம் 1991இல் வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். பின்னர் ஒன்றிய தலைவரானார். அதன்பின் 1995இல் கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டக்குழு அலுவலக செயலாளராக தன்னுடைய பணியைத் துவக்கியவர், 1998இல் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னரானார். அலுவலகச் செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் தன்னு டைய பணியைத் திறம்பட செய்து வந்தார். அதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டிலிருந்து தீக்கதிர் திருச்சி பதிப்பின் பொது மேலா ளராக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி யாற்றி வந்தார். சமீப காலமாக நுரை யீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த தோழர் பன்னீர்செல்வம், தன் உடல் நலம் பற்றி கவலைப்படாமல் தனது இறுதி மூச்சுவரை தீக்கதிரின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் அரும்பாடுபட்டவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தீக்கதிருக்கும் ஏற்பட்ட பேரிழப் பாகும். அவருக்கு கட்சியின் மாநில செயற் குழு புகழஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மனைவியும் மாதர் சங்க மாவட்டத் தலைவருமான தோழர் லிங்கராணி மற்றும் மகள், மகன் உள்ளிட்ட குடும்பத்தின ருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது அனுதாபத்தை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தலைவர்கள் இரங்கல்
தோழர் எஸ்.பன்னீர்செல்வம் மறைவுச் செய்தி அறிந்து, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், ஆர்.கருமலையான் உள் ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.