வாஷிங்டன், ஜன.4- பல்வேறு பணிகளுக்காக அமெ ரிக்காவில் இருந்து பிற நாடுகளில் குடி யேறிய அமெரிக்கர்கள் தங்கள் அமெ ரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்றும், அப்படி அவர்கள் விட்டுக்கொடுப்பதை அமெரிக்கா நிராகரிக்க முயல்வதும் தொடர்கதைகளாகியுள்ளது. அரசு சார்பில் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் லட்சக்கணக் கான அமெரிக்கர்கள் பல்வேறு நாடுக ளில் பணியாற்றி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களில் பலர் அமெரிக்கா வுக்குத் திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். தாங்கள் தங்கியிருக் கும் நாட்டில் உள்ள அமெரிக்கத் தூத ரகங்கள் வழியாக குடியுரிமையைக் கைவிடுவதற்கான விண்ணப்பங்க ளை அனுப்புகிறார்கள். அவ்வாறு அனுப்பும் விண்ணப்பங்களின் எண் ணிக்கையும், அடுத்த கட்டத்திற்கு நக ராத விண்ணப்பங்களின் எண்ணிக்கை யும் அண்மைக்காலங்களில் கடுமை யாக அதிகரித்துள்ளது. தி கார்டியன் நாளிதழில் வெளியாகி யுள்ள செய்தியின்படி, 3 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு தூதரகங்க ளில் தேங்கிக் கிடக்கின்றன. கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள துயரம் இந்த விண் ணப்பங்கள் அதிகரித்ததற்குக் கார ணம் என்பதோடு, தேக்கத்திற்கும் தொற்று பாதிப்பே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. குடியுரிமை விலக் கல் தொடர்பாக நேருக்கு நேர் அமர்ந்து விவாதித்த பிறகே அதை மேற்கொள்ள முடியும். அத்தகைய நடைமுறையை தொற்று நோய் தடுத்து நிறுத்தியி ருக்கிறது. குடியுரிமை வேண்டாம் என்று சொல்லும் ஒருவர், “கொரோனா தொற்று ஆபத்து எனக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது.
பணம் கொழிக்கும் நபர்களில் ஒருவ ராக நீங்கள் இல்லை என்றால், உங் களை நீங்களே காப்பாற்றிக் கொள் ளும் அவல நிலைக்குத் தள்ளப்படு வீர்கள். அரசிடம் இருந்து எந்த உதவியும் உங்களுக்குக் கிடைக்காது. இந்த சமூகத்தில் நான் ஒரு உறுப்பினர் என்பதைக்கூட விரும்பவில்லை என்ற உணர்வுதான் ஏற்பட்டது” என்கிறார். அமெரிக்க சமூகத்தைப் பற்றிய மதிப்பீடுகள் தனக்கு பெரும் கவ லையை ஏற்படுத்தியுள்ளதாக பின் லாந்தில் குடியேறியுள்ள மைக்கேல் கூறுகிறார். 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் குடியேறிய ஜோஷ்வா கிரேன்ட் அந்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருந்தாலும் அமெரிக்க கடவுச் சீட்டைக் விலக்கினால்தான் ஜெர்மனி யில் குடியுரிமை பெற முடியும். அதற் கான முயற்சியில் அமெரிக்கக் குடி யுரிமையை விலக்கிக் கொள்கிறேன் என்று விண்ணப்பித்திருக்கிறார். ஜூலை 2020ல் விண்ணப்பத்தை அளித்து விட்டேன். இன்னும் எதுவும் நடக்கவில்லை என்கிறார் அவர்.