tamilnadu

img

கொரோனா பரவல்: தொடர்ந்து கண்காணிக்கிறோம்

சென்னை,டிச.21- தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவ தாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களைத் தேடி  மருத்துவம் திட்டத்தின் சார்  பில் ஒரு கோடியாவது பய னாளிக்கு தமிழ்நாடு மருந்து பெட்டகத்தை முதல்வர் வழங்கவுள்ளார். இதற்கான  முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன் ஆகியோர் புதனன்று (டிச.21) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை  இயக்குநர் செல்வ விநாய கம், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துணை இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக விமான  நிலையத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வெளி நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங் கியுள்ளதாக தகவல் வரு கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து  தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது”என்றார். தமிழகத்தில் தேவை யான அளவிற்கு பரிசோ தனை மையங்கள் உள்ளன.  சீர்காழியில் கால் அழுகல்  நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக் கப்படும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப் படும் எனவும் அவர் கூறினார்.