tamilnadu

img

வந்தே பாரத் விரைவு ரயிலில் நீர்க் கசிவு

கண்ணூர், ஏப்.26- பிரதமர் நரேந்திர மோடி ஆர வாரத்துடன் கொடியசைத்து துவக்கி வைத்த வந்தே பாரத் விரைவு ரயிலில் மழைநீர்க் கசிவு ஏற்பட்டது. செவ்வாயன்று (ஏப்.26) முதல் சேவைக்குப் பிறகு கண்ணூ ரில் நிறுத்தப்பட்ட ரயிலில் நீர்க்கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாலை யில் பெய்த மழையில் வந்தே பாரத் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகளில் முற்றிலும் நீர் கசிந்தன. செவ்வாயன்று காசர்கோடுக்கு முதல் சேவையை முடித்த ரயில் அதிக பட்ச பாதுகாப்புக்காக கண்ணூர் கொண்டு வரப்பட்டது. ஏசி கிரில்லில் கசிவு காணப்பட்டது. பின்னர் பழுது நீக்கப்பட்டது. ஐசிஎப் தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்து பிரச்சனையை தீர்த்தனர். முதல் பய ணம் என்பதால், இதுபோன்ற பிரச்ச னைகள் ஏற்படுவது வழக்கம், மேலும் சில நாட்களுக்கு இதுபோன்ற ஆய்வு தொடரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சேவை பாதிக்கப்படாது என்றும், காசர்கோட்டில் இருந்து குறித்த நேரத்தில் சேவை தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரச்சனையை தீர்த்து, கண்ணூரில் இருந்து காசர்கோட்டுக்கு ரயில் புறப் பட்டது. காசர்கோட்டில் இருந்து புத னன்று 2.30 மணிக்கு ரயில் சேவை தொடங்கியது.