tamilnadu

img

தினக்கூலி தொழிலாளர்களுக்கு வங்கியில் சம்பளம்: குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வாக்குறுதி

சென்னை,ஏப்.24- பராமரிப்புப் பணி மேற்கொள்ளும் தற்காலிக ஊழியர்களுக்கு வாரிய தர விலைப்பட்டியல் படி  சம்பளத்தை வங்கி மூலம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வாடிகால் வாரிய ஊழியர் சங்கம் வலியுறுத்தியது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சட்டப்படி யான இஎஸ்ஐ, பிஎப், போனஸ் மற்றும் சமூக பாது காப்பு பயன்கள் வழங்க வேண்டும், பணியில் உள்ள வர்களுக்கும் , ஓய்வூதியர்க ளுக்கும், குடும்ப ஓய்வூதி யர்களுக்கும் அரசு அறி வித்த அகவிலைப் படியை உடனே வழங்கவேண்டும், பணிக்காலத்தில் இறந்த வர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திங்களன்று (ஏப்.24) சென்னை சேப்பாக்கத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

 மத்திய அமைப்பின் தலைவர் ஏ.புருஷோத்தமன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மா. ஆத்மநா தன், பொருளாளர் பி.குண சேகரன் உள்ளிட்ட பலர்  கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினர். சிஐடியு துணைப் பொதுச்  செயலாளர் வி.குமார் தலை மையில் துணைத் தலைவர்  எம்.சந்திரன், மத்திய அமைப்பின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சிறப்புச் செயலாளர் லில்லி யுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது, தினக்கூலி தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வங்கி  மூலம் வழங்கப்படும், தொகுப்பூதிய தொழிலா ளர்களுக்கு வழங்க  வேண்டிய நிலுவைத் தொகை சிறப்பு நிதி வரும் போது தவணை முறையில் கொடுக்கப்படும், பஞ்சப்படி  குறித்து அரசின் கவனத் திற்கு கொண்டுவந்து உரிய முறையில் கிடைக்க ஆவன செய்யப்படும், கருணை அடிப்படையில் வேலை வழங்க மீண்டும் வாரியக் கூட்டம் நடத்தி விரைவில் ஆக்கப்பூர்வமான முடிவு கள் எடுக்கப்படும் என்றும்  இயக்குநர் உறுதியளித்துள் ளார்.