tamilnadu

img

கணிதம், வரைபட பாடங்களை நீக்க முயற்சி தொழிற்பயிற்சி அலுவலர்கள் எதிர்ப்பு

சென்னை, அக். 14 - கணிதம், வரைபட பாடங்களை நீக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளி யன்று (அக்.14) தொழிற்பயிற்சி நிலை யங்கள் (ஐடிஐ) முன்பு அலுவலர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 91 ஐடிஐ-கள் செயல்படு கின்றன. இவற்றில் பயிற்சி பெறும் மாண வர்களுக்கு கணிதம் மற்றும் பொறியியல் வரைபட பாடப்பிரிவுகள்  அடிப்படையான பாடங்களாகும். இதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மாநிலம் முழுவதும் ஐடிஐ-கள் முன்பு தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உணவு இடை வேளை ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை கிண்டி ஐடிஐ முன்பு நடை பெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் டேனியல் ஜெயசிங், கிண்டி பகுதி தலைவர் பாரிவள்ளல்,  அலுவலர் சங்கத்தின் தலைமை நிலைய செயலாளர் என்.சுப்பிர மணியன், கிளைத்தலைவர் சீனிவாசன், இசைமணி, வேலைவாய்ப்பு துறை அலு வலர் சங்கத்தின் நிர்வாகி ஜி.அரி உள்ளிட் டோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின்பொ துச் செயலாளர் என்.ரமேஷ், “பாடத் திட்டத்திலிருந்து கணிதம், பொறியியல் வரைபட பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, பயிற்சி பெறும் மாணவர்களை கொத்தடிமை கூலிகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதற்காக, பயிற்சி நேரத்தை குறைக்கின் றனர். மேலும், மாணவர்களுக்கு கணினி (சிபிடி) வாயிலாக தேர்வு நடத்துவதை கைவிட்டு, வினாத்தாள் - விடைத்தாள் மூலம் நடத்த வேண்டும்” என்றார். “10 வருடத்திற்கும் மேலாக பொது-தனி யார் கூட்டு (பிபிபி) மற்றும் சிஓஇ பாடத் திட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர், அலு வலர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்ற தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.31 அன்று சென்னை கிண்டி யில் உள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் முன்பு மாநிலம் தழுவிய பெருந்திரள் முறை யீடு போராட்டம் நடைபெறும் ” என்றும் அவர் கூறினார்.