tamilnadu

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வருகை

அரியலூர், பிப்.13 - பல்வேறு வெளிநாட்டு பறவைகளின் வருகை கரைவெட்டி பறவைகள் சரணா லயத்தில் அதிகமாக உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல்துறை முன்னாள் தலைவர் டாக்டர். சிவசுப்பிரமணியன் தலைமையில் தன்னார்வலர்கள் கரைவெட்டி பறவை கள் சரணாலயத்தில் பறவைகள் கணக் கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.  

பல்வேறு வகையான நில பறவைகளும், நீர் பறவைகளும் சரணாலயத்திற்கு வருகை  தந்துள்ளன. நவீன போட்டோகேமரா, பைனா குலர் உள்ளிட்ட அதிநவீன தொலைநோக்கு கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு பறவை களின் வகை, அதன் தாய் நாடு, அதன் நிறம், இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து கணக்கெடுத்து பதிவு செய்தனர். பறவைகள் வருகை அதன் தங்கும் காலம், இனப்பெருக்கம் குறித்து வனத்துறையிடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் சரணால யத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பறவைகள் எண்ணிக்கை சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக லடாக் தெற்காசிய பகுதியில் இருந்து கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற பறவை உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வந்துள்ளன. சரணாலயத்திற்கு வரக்கூடிய பறவை கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்களில் முடிவடைந்து, இதுகுறித்த அறிக்கை வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரி விக்கின்றன.