விருதுநகர், ஜன.1- விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை திடீரென உயர்ந் துள்ளது. விருதுநகர் சந்தையில் அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில், கடந்த வாரம் வரை தொடர் சரிவைச் சந்தித்து வந்த பாமாயி லின் விலையானது, இந்தவாரம் திடீரென உயர்ந்துள்ளது. பாமாயில் வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவதாலும், உள்நாட்டில் பாமாயில் விளைச்சல் அதிகரித்து வருவதாலும் தொடர்ந்து அதன் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் விலையானது ரூ.1540-க்கு விற்கப்பட்டு வந்தது. வருட இறுதியான இந்த வாரத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1590-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், எண்ணெய் பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்வோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல், 100 கிலோ கடலை புண்ணாக்கின் விலை கடந்த வாரம் ரூ.4800க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.4900-க்கு விற்பனையாகிறது. இதனால், கால்நடை களை வளர்த்து வரும் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். அதற்கு காரணம், ஆடு, மாடுகளுக்கு கடலை புண்ணாக்கு முக்கிய தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிற உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.