tamilnadu

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பேரூர் வட்டாச்சியர் அலுவலகம் அருகே வாரிசு சான்றிதழ் பெற மூதாட்டி யிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக  அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், ஆலாந்துறை யைச் சேர்ந்த மாராத்தாள் என்ற மூதாட்டி, வாரிசு சான்றிதழ் பெறுவதற் காக மத்துவராயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப் போது, கிராம நிர்வாக அலுவலர் எம். வெற்றிவேல், சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டார். இதில்,  முதற்கட்டமாக ரூ.1,000-ஐ மாராத்தாளி டம் இருந்து வெற்றிவேல் பெற்றுக் கொண்டார். மீதமுள்ள ரூ.4,000 கொடுத் தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்ப டும் என வெற்றிவேல் கூறினார். இதுகுறித்து மாராத்தாள் தனது மரு மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தெரி வித்தார். இதையடுத்து, கிருஷ்ண மூர்த்தி கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு  அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீ சார் ரசாயனம் தடவிய ரூ.3,500 நோட்டு களை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து  அனுப்பினர். பேரூர் வட்டாச்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவ லர் வெற்றிவேலிடம் சனிக்கிழமை கிருஷ்ணமூர்த்தி பணத்தை கொடுத் தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றி வேலை மடக்கிப் பிடித்தனர். திடீரென இருசக்கர வாகனத்தில் தப்பிய வெற்றிவேல், அருகில் இருந்த  பேரூர் பெரிய குளத்தில் குதித்து பணத்தை தண்ணீரில் வீசினார். அவ ரைப் பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரும் குளத்தில் குதித்து  வெற்றிவேலை பிடித்தனர். பின்னர், அவரிடம் விசாரணை மேற் கொண்டு, லஞ்சம் வாங்குதல், தடயங் களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின் னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனி டையே, பேரூர் குளத்தில் வீசப்பட்ட பணத்தை போலீசார் பேரூர் பேரூராட்சி  பணியாளர்களுடன் தேடினர்.