tamilnadu

img

வெளியூர்களுக்கு 2 லட்சம் பேர் பயணம்

சென்னை, அக்.22- தீபாவளிக்காக சென்னையி லிருந்து சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக சென்னையில் 6 பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளின் எண்ணிக்கையை விட  கூடுதலாக 4,128 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  முதல் நாளான வெள்ளிக் கிழமை(அக்.21) கூட்டம் அலை மோதியது. காலையிலிருந்தே கோயம்பேடு உள்ளிட்ட சிறப்பு பேருந்து நிலையங்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதியி லிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல  சாரை சாரையாக புறப்பட்டு வந்தனர்.  இதனால் கோயம்பேடு பேருந்து நிலை யம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. தாங்கள் செல்லும் பகுதிக்கான பேருந்தில் இடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்த்து சொல்ல கம்ப்யூட்டர் தகவல் மையம் நடைமேடையில் நிறுவப்பட்டது. இருக்கைகள் இருக்கும்பட்சத்தில் முன்பதிவு செய்யவும், நேரடியாக பேருந்தில் அமரவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சென்னை, விழுப்புரம், சேலம்,  மதுரை, கோவை, கும்பகோணம் போக்குவரத்து கழக அதிகாரி கள் கோயம்பேட்டில் முகாமிட்டு  பயணிகள் எளிதாக பேருந்துகளுக்கு செல்ல வழி வகுத்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இரவு 7, 8 மணிக்கு கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. கூட்டத்தை சமாளிக்க தயாராக நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகள் மூலம் ஏற்றி அனுப்பி வைத்தனர். நள்ளிரவு வரை மக்கள் வந்து கொண்டே இருந்ததால் அதற்கேற்றவாறு பேருந்துகளை இயக்கினார்கள். குறிப்பாக திருச்சி, மதுரைக்கு அதிகளவில் மக்கள் பயணம் செய்தனர். அதிகாலை 2 மணி வரை கூட்டம் இருந்ததால் சொந்த  ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். “பேருந்துகள் இல்லை” என்று சொல்லாத அளவிற்கு போதுமான பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரே நாளில் மட்டும் அரசு பேருந்துகளில் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

விழுப்புரம் பகுதி மக்கள் செல்லு வதற்கு வதியாக சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. இது தவிர 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில் 30 ஆயிரம் பேர் வெளியூர் சென்றனர். இதற்கிடையில் கோயம்பேட்டிலிருந்து சனிக்கிழமை (அக்.22) அதிகாலை 4 மணியி லிருந்து வெளியூர்களுக்கு பேருந்து கள் இயக்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் திரு வண்ணாமலை, வேலூர், திருப்பத் தூர், செஞ்சி செல்லக்கூடிய பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த தால் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டது. மேலும் கூட்டம் அதிகரித்த தால் 3,686 பேருந்துகள் இயக்கப் பட்டது.  3 நாட்கள் தொடர் விடுமுறை  விடப்பட்டதால் வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. பெரும்பாலான கூலி  தொழிலாளர்கள் வேலையை முடித்து  விட்டு கூலியை பெற்று செல்வார்கள் என்பதால் தேவையான பேருந்து களை இயக்கப்பட்டன. முன்னதாக தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளிக்கிழமை (அக்.21) ஆய்வு செய்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு வெளியூர் செல்ல வசதியாக செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது போக்குவரத்து செயலாளர் கோபால், ஆணையர் நிர்மல் ராஜ், மேலாண்மை இயக்குநர்கள் அன்பு ஆபிரகாம், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.