1939 முதல் 1945 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் போது பாசிச ஜெர்மனியின் ஹிட்லரது படைகளை வீழ்த்தி சோவியத் யூனியனின் செஞ்சேனை இந்த உலகை பாதுகாத்த நாள் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்த சுவரொட்டி கண்காட்சி வியாழனன்று (மே 11) தொடங்கியது. ஜூன் 1 வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை உலகப்போரில் பங்கேற்ற வீரர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ், இந்திய ரஷ்ய வர்த்தக சபை தலைவர் ஜெம் வீரமணி, கேப்டன் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.