tamilnadu

img

‘பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு அவசியம்’

பாதிக்கப்பட்டோரும், அவரது குடும்பத்தினரும் அவர்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து நன்கு அறிந்துள்ளனரா என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஏனென்றால், மிகவும் ஏழ்மையான மற்றும் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். புகார் அளிப்பவர்களுக்கு ஏற்படுத்தப்படும் சட்ட உரிமை குறித்த விழிப்புணர்வு முயற்சிகள், வழக்குகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், தண்டனை விகிதத்தை அதிகரித்து, குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது. இறுதியாக, குழந்தைகளுக்கு எதிராக நிகழும் குற்றங்களை குறைப்பதற்கும் இது வழிவகுக்கும். இதற்கான நடைமுறைகள் அச்சிடப்பட்ட படிவத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. புகார்தாரருக்கு வழங்கப்படும் படிவம் ஏ, முதல் தகவல் அறிக்கை மற்றும் பிற நிர்வாக விவரங்களையும், படிவம் பி விசாரணை அதிகாரி அளிக்கும் ஆரம்ப மதிப்பீட்டு அறிக்கையையும் உள்ளடக்கியது.

முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள், படிவம் பி குழந்தைகள் நல ஆணையத்திற்கு அனுப்பப்படும். இந்நடைமுறைகள் அனைத்தும், புகார்தாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த விபரம் பொது வெளியில் வெளிப்படாமல் மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைகள் நலக் குழுவினர், பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ஆலோசனை அளிக்கின்றனர். மேலும், பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால மற்றும் முழு இழப்பீடு தாமதமின்றி கிடைக்க நீதிமன்றம் மூலம் நாங்கள் உதவி செய்கிறோம். தேனி மாவட்டத்தில் மட்டும், நான்கு வழக்குகளில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 100 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை நாங்கள் தொடர்ந்து கண்கா ணித்துக் கொண்டிருக்கிறோம். தேனியில் கடந்த ஜூலை மாதம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு ரூ.3 லட்சம் இடைக்கால நிவாரணமும், பிற செலவுகளுக்காக ரூ.2 லட்சமும் உடனடியாக வழங்க வேண்டும் என தேனி மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. வாய்பேச மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது.  

அஸ்ரா கார்க் தென் மண்டல காவல்துறை தலைவர்