வெண்மணி தியாகிகள் நினைவு கொடி பயணக் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு
மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் ஏற்றப்படவுள்ள வெண்மணி தியாகிகள் நினைவு கொடி பயணக் குழுவினருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகை மாவட்டம் வெண்மணி தியாக பூமியில் இருந்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரான உ.வாசுகி தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர்கள் எம். ஜெயசீலன், சாமி.நடராஜன் மற்றும் ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய பயணக்குழு திங்கள்கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்ட எல்லையான புனல்குளம் வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு கட்சியின் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தொடர்ந்து, கந்தர்வகோட்டை பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலளார் எஸ்.நாராயணசாமி தலைமை வகித்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற வரவேற்புக்கு கட்சியின் புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். செவ்வாய்க்கிழமை காலையில் திருமயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.வைகைராணி தலைமை வகித்தார். பயணக்குழுவினரை பட்டாசு வெடித்தும், வின் அதிரும் முழக்கத்துடனும், செந்தொண்டர் அணிவகுப்புடனும், சிலம்பாட்டக் கலையுடனும் வழியெங்கும் உற்சாகமாக வரவேற்று அளித்தது மக்களை கவர்ந்தது. இந்நிகழ்வுகளில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலளார் எஸ். சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கவிவர்மன், ஏ.ராமையன், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தன், கி.ஜெயபாலன், டி.சலோமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பணயக்குழுவோடு புதுவை சப்தர்ஹஸ்மி குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு கொடிப் பயணத்திற்கு, பாபநாசம் அண்ணா சிலை அருகில் வரவேற்பளிக்கப்பட்டது. பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். இதில், கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், சாமி நடராஜன், மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மூத்த தோழர் காதர் ஹுசைன், மாதர் சங்கச் செயலாளர் கஸ்தூரி பாய், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முருகேசன், ஜார்ஜ், செல்வகுமார், ராமதாஸ், மகேந்திரன், கஸ்தூரி, கிளைச் செயலாளர்கள் நஜீர், பரமசிவம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.