சென்னை, ஜூலை 15- வேங்கைவயல் கிராமத்தில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழி வுகள் கலந்த சம்பவம் அரங்கேறி இரண்டு வருடங்கள் கடந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலை யில், மூன்று குற்றவாளிகளை சந்தேகித்து இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப் பட்டது. இதனைக் கேட்டுக் கொண்ட உயர்நீதிமன்றம், இரண்டு வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கெடு விதித்துள்ளது. இதையடுத்து, மணமேல்குடி காவலர் முரளிராஜாவிடம் குரல் மாதிரி பரிசோத னை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு பேரிடம் உடனடியாக விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் சிபிசிஐடி ஐஜி அன்பு ஆலோசனை நடத்தினார்.