tamilnadu

img

125 யூனிட்டுக்கு மேல் ரத்த தானம் வாலிபர் சங்கத்திற்கு கேடயம் வழங்கிப் பாராட்டு

மயிலாடுதுறை, அக்.1 -                           மயிலாடுதுறை அரசு பெரியார்  மாவட்ட தலைமை மருத்துவமனை  கூட்டரங்கில் தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தையொட்டி தேசிய தன்னார்வ ரத்ததான கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து ரத்தக் கொடையாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.  மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் செயல்படும் ரத்த வங்கிக்கு  தொடர்ந்து முகாம்களை நடத்தியும், அவசர தேவைக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்த தான சேவை  செய்து வருகின்றனர்.  இதனைப் பாராட்டி சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகனி டமும், சீர்காழி அரசு மருத்துவமனை யிலுள்ள ரத்த வங்கிக்கு முகாம்கள்  மூலமாகவும், அவசர தேவைக்காக வும் தொடர்ந்து ரத்த கொடை வழங்கி வரும் வாலிபர் சங்கத்தினைப் பாராட்டி  அமைப்பின் மாவட்ட துணைச் செய லாளர் குமரேசனிடமும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில், 17 ரத்தக் கொடையாளர் களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேட யங்களை மாவட்ட ஆட்சியர்  வழங்கி னார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய தன்னார்வ ரத்த தான தின உறுதிமொழி எடுக்கப் பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப் பாண்டில் மட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்த தான முகாம் கள் நடத்தியும், அவசர தேவைக்காக வும் என 125 யூனிட்டுக்கு மேல்  ரத்தத்தை கொடையாக வழங்கியுள்ள னர்.