tamilnadu

img

வடகாடு: பிரச்சினைக்குரிய இடத்தில் உள்ள மதுபானக் கடை அகற்றப்படும்

வடகாடு: பிரச்சினைக்குரிய இடத்தில் உள்ள மதுபானக் கடை அகற்றப்படும்

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உறுதி

புதுக்கோட்டை,  மே 7 - வடகாட்டில் பிரச்சி னைக்குரிய இடத்தில் உள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என  மாநில பிற்படுத்தப் பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உறுதி யளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாட்டில் கோவில் தகராறில் பட்டியலின மக்கள் தாக்கப் பட்ட சம்பவத்தில், அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வரும் பட்டியலினக் குடியிருப்பைச் சேர்ந்த வர்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, எங்கள் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மதுக்கடையில்தான் அடிக்கடி  இரு தரப்பினருக்கும் மோதல் நடக்கிறது. எனவே அந்தக் கடையை அகற்ற வேண்டும்  என்றும், கோவில் வழிபாட்டு உரிமை அரசு  பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். மதுக்கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோவில்  வழிபாட்டு உரிமையில் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை உறுதியாக செய்வதாகவும் அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்தார். அமைச்சருடன் விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் துணைப் பொதுச் செயலர்  வன்னியரசு, புதுக்கோட்டை மாவட்டச் செய லர்கள் இளமதிஅசோகன், தமிழ்ச்செல்வன்  உள்ளிட்டோரும், அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.