வடகாடு: பட்டியலின மக்கள் மீது தாக்குதல் இன்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கோவில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேல்முரு கன் அமர்வில் அவசர வழக்காக விசா ரிக்க கோரி முறையீடு செய்திருந்தார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் கடந்த மே 5 ஆம் தேதி முத்துமாரியம்மன் கோவில் தே ரோட்டத் திருவிழா நடைபெற்றது. கோவிலுக்குள் பட்டியல் இனத்த வரை அனுமதிக்காமல், அதனைப் பார்க்கச் சென்ற பட்டியல் இனத்தவர் கள் தாக்கப்பட்டுள்ளனர். பட்டியலினத் தவர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்த பிறகும், மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்யவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள் மீது 300 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. ஆனால், 13 பேர் மீது மட்டுமே காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப கால மாக, பட்டியலின மக்கள் பாதிக்கப்படு வது அதிகரித்துள்ளது. அதற்கு, அங்குள்ள சாதிய கட்டமைப்பு முக்கிய காரணமாக உள்ளது. கோவில் திருவிழாவில் பட்டியல் இன மக்கள் பங்கேற்பதை தடுக்கும் வித மாக செயல்பட்ட நபர்கள் மீதும், பட்டிய லின மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிய வேண்டும். வீடுகள், பொருட்க ளையும் சேதப்படுத்தி உள்ளதால், பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எனவே இந்த பொது நல வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் தரப்பில், நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் கே.கே.ராம கிருஷ்ணன் அமர்வு முன்பு புதனன்று முறையிட்டார். அப்போது இதை கேட்ட நீதிபதிகள், வழக்கை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மத்திய மண்டல கண்காணிப்பாளர், புதுக்கோட்டை காவல் கண்கா ணிப்பாளர் உள்ளிட்டோர் வியாழனன்று (மே 15) காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.