அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடி யேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பி யுள்ளதாக அமெரிக்காவின் உள்நாட்டு பாது காப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலை தேடியும், கல்வித் தேவைக்காகவும் உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து இளைஞர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த பின்னணியில் சட்டரீதியாக மட்டுமின்றி சட்டவிரோதமாக மெக்சிகோ உள்ளிட்ட எல்லை நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டவிரோத நுழைவு, புலம்பெயர்ந்தோரின் வருகையுடன் இணைந்து அந்நாட்டின் அரசியலில் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. டிரம்ப்பின் குடியரசுக் கட்சியும், கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சியும் பெரும் விவாதத்தை நடத்தி இனவெறியை தூண்டி வாக்குகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் வேலையின்மை காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அமெரிக்காவை நோக்கி சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் இருந்து அதிகப்படி யான இளைஞர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி கொலம்பியா, ஈக்குவடார், பெரு, எகிப்து, மோரிடோனியா, செனகல், உஸ்பெகிஸ்தான் உட்பட பல நாடு களில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வுக்குள் பலர் சென்றுள்ளனர். இன்னும் பல ஆயிரக்கணக்கான மக்கள் செல்ல முயற்சிகள் செய்து வருகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கி யிருந்த இந்தியர்களை அக்டோபர் 22 அன்று இந்தியாவிற்கே திருப்பி அனுப்பியதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை நபர்களை அனுப்பியுள்ளது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாது காப்புத் துறை துணைச் செயலர் கிறிஸ்டி ஏ கேன்கலோ, இந்த நடவடிக்கை இந்திய அரசின் ஒத்துழைப்புடன்தான் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிக்கையில் அமெரிக்காவிற்குள் வர சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் இந்த 2024 நிதி ஆண்டில் மட்டும் 145 நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்களை அமெரிக்காவில் இருந்து அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பி உள்ளதாகவும் இதற்காக 495 விமானங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.