tamilnadu

img

தரங்கம்பாடி தமிழ்நாடு அரசு ஓட்டலை மீண்டும் திறக்க கோரிக்கை

மயிலாடுதுறை, நவ.3 - தரங்கம்பாடியில் உள்ள தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை ஓட்டலை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரம்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே  உலகின் பல்வேறு நாடுகளுக்கு கப்பல்  வழியாக பருத்தி ஆடைகள், வாசனைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்று மதி செய்து, பல பொருட்களை இறக்கு மதி செய்த துறைமுக நகரம் தரங்கம் பாடி. டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி,  பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆகிய வற்றின் வணிக மையமாக விளங்கிய  இந்நகருக்கு தினமும் பல நாடுகளி லிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். குறிப்பாக, உடல்  நலத்திற்கு நன்மை பயக்கும் ஓசோன் கலந்த காற்று அதிகம் வீசுவதால், இணையதளம் வாயிலாக அறிந்து வரு பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

சுற்றுலா தலங்களின் பெருமை

இங்கு அழகிய கடற்கரை, பழமை யான மாசிலாநாதர் ஆலயம், தமிழ றிஞர் சீகன்பால்கு கட்டிய ஆசியாவின் முதல் சீர்திருத்த தேவாலயம், அவரது இல்லம், 18 ஆம் நூற்றாண்டின் பள்ளிக்கூடம், இந்தியாவின் முதல் தமிழ் அச்சகம், காகித ஆலை இருந்த கடுதாசிப்பட்டறை, டேனிஷ் கட்டிடங்கள், தேவாலயங்கள், மசூதி கள் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் நிறைந்துள்ளன.

ஓட்டலின் வரலாறும் தற்போதைய நிலையும்

முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், ஒன்றிய அரசு  நிதியுதவியுடன் கட்டப்பட்ட தமிழ்நாடு  அரசு ஓட்டல் 2000 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 2017-ல் போதிய வரு மானம் இல்லை என்ற காரணத்தால், தாஜ் குழுமத்தின் நீம்ரானா நட்சத்திர ஓட்டலுக்கு வழங்கப்பட்டது. சில மாதங்களில் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்திய பின், பராமரிப்பின்றி திரும்ப ஒப்படைக்கப்பட்டது. தற்போது  7 ஆண்டுகளாக புதர் மண்டிக் கிடக்கிறது.

உயர் கட்டணம் - சாதாரண மக்கள் அவதி

தற்போது தரங்கம்பாடியில் நட்சத்திர ஓட்டல்களில் காபிக்கு ரூ.200,  தேநீருக்கு ரூ.150 என உயர் கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. இந்த விலை யால் சாதாரண மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. 

மக்கள் பிரதிநிதியின் கோரிக்கை

பேரூராட்சி துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன் சமீபத்தில் சுற்று லாத்துறை அமைச்சரிடம் மனு அளித் துள்ளார். அதில், “தரங்கம்பாடியில் 6  நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட்டு வரு கின்றன. சாதாரண மக்கள் பயன்பெ றும் வகையில் தமிழ்நாடு ஓட்டலை மீண்டும் திறக்க வேண்டும். தனியார் ஓட்டல்களின் கட்டணங்களையும் கட்டுப் படுத்த வேண்டும்” என வலியுறுத்தி யுள்ளார்.

எதிர்பார்ப்பு

தரங்கம்பாடியில் பல்வேறு மேம் பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு ஓட்டலை மீண்டும்  திறந்தால் சுற்றுலாப் பயணிகள் பயன டைவதோடு, சுற்றுலாத் துறைக்கும்  வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.   

     - செ.ஜான்சன்