tamilnadu

பெற்றோருக்கு தெரியாமல் சட்டவிரோதமாக தத்துக் கொடுக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை

மதுரை, மே 27- நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த மீனவர் அஸ்ரப் அலி(40). இவரது மனைவி நிர்மலா பேகம். இவர்களுக்கு மும்தாஜ் பேகம்(3), ராஜா உசேன்(ஒன்றரை வயது) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்நிலை யில் அஸ்ரப் அலி வறுமையில் இருந் ததால் தனது குழந்தை மும்தாஜ் பேகத்தை மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள மதராசா வில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்துள்ளார். அவ்வப்போது மதுரைக்கு வந்து குழந்தையை பார்த்துச் சென்றுள் ளார். இந்நிலையில் கரோனா பொது முடக்கத் தால் மூன்று மாதமாக குழந்தையை பார்க்க முடியவில்லை. இதனால் மதரசா நிர்வாகி முகமது அஸ்ரபிடம் குழந்தையிடம் பேச வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்கு அவர் சரியான பதிலளிக்காததால் அஸ்ரப் அலி செவ்வாயன்று மதுரைக்கு வந்து மத ரசாவுக்கு சென்றபோது அங்கு குழந்தை இல்லாதது தெரிய வந்தது.  இதுகுறித்து விசாரித்த போது குழந்தை யை பெற்றோருக்கு தெரியாமல் தத்து கொடுத்திருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினயிடம் அஸ்ரப் அலி தனது குழந்தையை கண்டுபிடித்துத் தரக்கோரி புகார் அளித்தார். புகாரின்பேரில் மதுரை மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் குழந்தை யை தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதிய ருக்கு சட்டவிரோதமாக தத்து கொடுத்தி ருப்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடியில் இருந்த குழந்தை மீட்கப்பட்டு, மதுரைக்கு செவ் வாய்க்கிழமை மாலை கொண்டு வரப் பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட கொரோனா ஒழிப்பு சிறப்பு அலுவலர் கண்ணன் ஏற்பாட்டின் பேரில், சிறப்பு அனு மதி மற்றும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு உறுப்பி னர்கள் ரெஜிஸ், ஸ்ரீதர், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் ஜோஸ், கோபால கிருஷ்ணன், வழக்குரைஞர் முத்துக்குமார் ஆகியோர் கொண்ட குழுவின் மூலம் நாகப் பட்டினம் கொண்டு செல்லப்பட்டு பெற் றோரிடம் சேர்க்கப்பட்டது.