tamilnadu

img

ஆட்டோமொபைல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்திட கூட்டமைப்பு உதயம்

காஞ்சிபுரம், ஆக 31-   அசல் வாகன உற்பத்தி நிறுவனங் களின் தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறு வனங்களின்  தொழிலாளர்கள் கூட்ட மைப்பின் முதல் அகில இந்திய மாநாடு தமிழ்நாடு காஞ்சிபுரம் மாநக ரில் ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதி களில் நடைபெற்றது. இந்தியா  முழு வதிலும் இருந்து ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் இதில்  பங்கேற்றனர்.   மாநாட்டிற்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தர ராசன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் துவக்கி வைத்துப் பேசினார். கர்நாடகா மாநில பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், அகில இந்திய துணைத் தலைவர்கள் உமேஷ், சாய்பாபு, சந்திப் குப்தா, தமிழ் மாநில இணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், ஆர்.சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.  அசல் வாகன உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு 35பேர் கொண்ட குழுவின் கன்வீனராக எஸ்.கண்ணன், உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு  45பேர் கொண்ட குழுவின் கன்வீனராக பரத்வாஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   இந்திய முழுவதும் 16 மாநிலங் களில்  ஆட்டோமொபைல் உற்பத்தி மையங்கள்  உள்ளன.  இந்தியாவின் கார் உற்பத்தி  மூன்று மையங்களில் நடைபெறுகிறது. அதில் 35 விழுக்காடு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

நாட்டின் மொத்த ஆட்டோ மொபைல் வாகனங்களின் ஏற்றுமதி யில் 60 சதவிகிதம் சென்னை சுற்றியுள்ள ஆலைகளான அசோக் லைலாண்ட், ஃபோர்டு, `ஹூண்டாய், ரெனால்ட், மிட்சுபிசி, நிஸான், பிஎம்டபிள்யூ, சிற்றோன், டெய்மர், `ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், கப்பாரோ, மினி ஆகிய  நிறுவனங்களில் இருந்து நடைபெறு கிறது. ஆட்டோமொபைல் கார், இருசக்கர  வாகனம் போன்ற உற்பத்தி நிறு வனங்களுக்கு தனியாகவும் அந்நிறு வனங்களுக்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் இரண்டிற்கும் அகில இந்திய கிளை உரு வாவதற்கு இங்கு தனித்தனியே இரண்டு  சிறப்பு மாநாடுகள் நடை பெற்றது.

உழைப்புச் சுரண்டல் 

ஆட்டோமொபைல் தொழிலில்  பணி யாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு சிரமங்களும், கஷ்டங்களும் அதி கரித்துள்ளது. நிறுவனங்கள் தொழிற்சங்கத்தை அனுமதிக்க மறுக்கிறார்கள். தொழிலாளர்களை பழி வாங்குவது, நிரந்தர தொழிலாளர்களை மிகக் குறைவாக பணியமர்த்துவது, நிரந்தரமற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி உழைப்பைச் சுரண்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலைக்கு பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லை, இந்நிலை யில் தொழிலாளர்கள் வேலையிழப்பு என்பது பரவலாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தொழிற்சாலைகள் அதிகம்  நிறைந்த மாவட்டம் காஞ்சி புரம் மாவட்டம். தொழிற்சாலைகளை நிர்வாகம் மூடுவதற்கு என்ன காரணம் என்பதை  அரசு தெரிந்து கொள்வதில்லை, நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. ஆனால் நோக்கிய செல்போன் யாரும் பயன்படுத்தாமல் இல்லை.  மீண்டும் நோக்கியா, ஃபாக்ஸ்கான்  தொழிற்சாலைகள் இயங்கி வரு கின்றன. இதை அரசு அனுமதிக்க கூடாது, தொழிற்சாலையை மூடுவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளை மூடுவது அதிகரித்து வருகின்றது. இதனால்  வேலையிழப்பு தொடர் கதையாக வுள்ளது இதில் தமிழக அரசு தலையிட வேண்டும். 

உதிரிபாக நிறுவனங்கள் மிரட்டல்

`ஹூண்டாய் போன்ற தொழிற் சாலைகளில் ரோபோ வை புகுத்தி தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது. நிரந்தரத் தொழி லாளர்களின் எண்ணிக்கை  அந்நிறு வனம் குறைந்து வருகிறது. அதேபோல ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப் பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங் கள் தயாரித்துக் கொடுக்கிற ஏறக் குறைய 40 தொழில் நிறுவனங்கள் மூடு வோம் அல்லது ஆட்கள் எண்ணிக்கை யை குறைப்போம் என்று அந்நிறு வனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.  இதனால் தமிழகஅரசு இதன் மீது கவனம் செலுத்தி தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். சிஐ டியு எடுக்கக்கூடிய அனைத்து நட வடிக்கைகளிலும் ஆட்டோ மொபைல் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளர். நாடு முழுவதும் ஆட்டோமொபைல் தொழிலாளர்களை ஒருங்கிணைப் பதற்காக ஒரு வலுவான அமைப்பாக புதிய அமைப்பு  உருவாகும் என்றார்.  இவ்வாறு அவர் கூறினார்.