தேனி, அக்.20- போடியில் தனியார் ஏலக்காய் தரம் பிரிக்கும் வர்த்தக மையத்தில் ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் போடி மூணாறு சாலையில் தனியார் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்டத் திற்கு வியாழனன்று நீர்வள ஆய்வுக்காக வந்த ஒன்றிய உணவு பதப்படுத்துதல் மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தனியார் ஏலக்காய் தரம் பிரிக்கும் மையத்தை ஆய்வு செய்தார். ஏலக்காயின் அளவு வாரியாக தரம் பிரித்தல், சுத்தம் செய்தல், கழிவு காய்களை அகற்றுதல், உலர்த்துதல், பாக்கெட்டுகளாக பிரித்தல் ஆகிய பணிகள் நவீன இயந்தி ரங்கள் மூலம் நடைபெற்று வருவதை அமைச்சர் ஆய்வு செய்தார். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏலக்காய் அனுப்பப்படுவதையும் இயந்தி ரங்களின் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். பின்னர் அங்கு பணியாற்றும் பெண் தொழிலாளர்களிடமும் குறை களை கேட்டறிந்தார். ஆய்வின்போது தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், தேனி நாடாளுமன்ற உறுப்பி னர் ஓ.ப.ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர்.