சென்னை, மார்ச் 24 - தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்ன லிஸ்ட்ஸ் (டியுஜெ) ஒருங்கிணைப் பில் மாநில அளவிலான பத்திரிகை யாளர் கோரிக்கை கருத்தரங்கம் புதனன்று (மார்ச் 22) மாலை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அரங்கில் நடைபெற்றது. டியூஜெ மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் தலை மையில் நடைபெற்ற இக்கருத்த ரங்கில் தொமுச பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி, சிஐடியு மாநிலத்தலைவர் அ. சவுந்தரராசன் உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர்.
தொழிற்சங்கம் எனும் அரண்
தொமுச பொதுச்செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., பேசுகை யில், “நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைத் துறையை விலைக்கு வாங்குவதும் இருட்டடிப்பு செய்வ துமான நிலை தற்போது உள்ளது. கடந்த காலங்களில் முதல்வராக இருந்த கலைஞர் , தீக்கதிர் நாளி தழை அதிகாலையிலேயே படித்து விட்டு எங்களையும் படிக்கத் தூண்டுவார். ஒருமுறை டீசல் இரட் டைவிலை குறித்து தீக்கதிரில் வந்த செய்தியை கலைஞர் படித்துவிட்டு, என்னை அழைத்து அதுகுறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அந்த செய்தி முரசொலியில் உடனே வரவேண்டும் என வலி யுறுத்தினார். அந்த அளவிற்கு செய்தியின் முக்கியத்துவம் அறிந்தவர் கலைஞர். அவர் வழியில் வந்த நாங்கள் பத்திகையாளர்களின் வாரியக் குழுவில் உங்களைப் போன்ற உழைக்கும் பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகளை உறுப்பினர் களாக நியமனம் செய்ய வலி யுறுத்துவோம். கடந்த 10 ஆண்டுக ளாக தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசை அமல்படுத்தவிடாமல் தொழிற்சங்கங்கள்தான் அரணாக பாதுகாத்து வருகிறோம். பத்திரி க்கையாளர் நல வாரிய குறைபாடு கள் மற்றும் அச்சு, காட்சி ஊடக வியலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்போம்” என்று கூறினார்.
சட்டமன்றத்தில் எழுப்புவோம்!
அ.சவுந்தரராசன் பேசுகையில், “பத்திரிகையாளர்களின் நலனுக் காக தொடர்ந்து போராடிவரும் டியூஜெ உடன் அனைத்து ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் அமைப்புகள் இணைந்து போராடி னால் தான் அனைத்து கோரிக்கை களையும் வென்றெடுக்க முடியும். மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க பத்திரிகையாளர்கள் இதர தொழிற்சங்கங்களோடும் ஒன்றிணைந்து போராடவேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக பத்திரிகை யாளர்கள் ஊதியம் என்பது அநீதி யாக இருக்கிறது. அவர்கள் வாழ் வதற்கான குறைந்தபட்ச தேவைக் கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் கணக்கின்படி குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படு வதில்லை. காட்சி ஊடகத்தில் இருப்பவர்கள் இன்னும் அதிக மான பாதிப்புக்குள்ளாகி வருகின்ற னர். ஓய்வூதியம் பெறும் பத்திரிகை யாளர் இறந்து போனால் அவரது குடும்பத்தினருக்கு அந்த ஓய்வூதி யம் வழங்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் பெயரளவில் பத்திரி கையாளர் ஓய்வூதியம் இருக்கிறதேயன்றி அதன் நோக்கம் முழுவதுமாக நிறைவேறவில்லை. அவர்களின் பணியின் அவசியம் கருதி பேருந்துப் பயண பாஸ் வழங்க வேண்டும். சிறுபத்திரிகை யாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஊடகம் மற்றும் பத்திரிகை யாளர்கள் முன்வைத்துள்ள நியாய மான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடந்துகொண்டிருக்கும் கூட்டத்தொடரிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் மூலமாக எழுப்புவோம். செய்தியாளர்களின் உரிமைக்காக சிஐடியு தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றார்.
இக்கருத்தரங்கில் ஏஐடியுசி மாநிலப்பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன் , மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் செயல் தலைவர் எம்.துரைப்பாண்டியன், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு தலைவர் ஆர்.ரங்கராஜன், எம்.யூ.ஜெ தலை வர் எல்.ஆர்.சங்கர், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தலைவர் ஏ.ஜெ.சகாய ராஜ், அறம் இணையதள ஆசிரியர் சாவித்திரி கண்ணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். முன்னதாக டியூஜெ மாநில பொதுச் செயலாளர் கே. முத்து, துணைப் பொதுச் செயலாளர் எஸ். டேவிட்குமார், அமைப்புச் செயலா ளர்கள் ஏ. தமிழ்ச்செல்வன், பி. ஆர். வேளாங்கன், இணைச் செயலா ளர்கள் எம். கே. சாகுல் ஹமீது, ஆர். முருகக்கனி, ஏ.ஆர். லட்சு மணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாவட்ட செய லாளர் எம். ஜாபர் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் போளூர் சுரேஷ் துவக்க உரை யாற்றினார்.சென்னை மாவட்ட தலைவர் எஸ்.பி தேவேந்திரன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு ,வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருச்சி, விழுப்புரம்,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பத்திரிகையாளர்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பினை (Labour Code) ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்; 2021 சட்டப்ரவைத் தேர்தலில் தி.மு.க. தேர்தல்அறிக்கையில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தமிழ் நாடு அரசு நிறைவேற்றவேண்டும்; அங்கீகார அட்டை, அடையாள அட்டை என்ற பேதம் இல்லாமல் ஒரே அடையாள அட்டையாக வழங்க வேண்டும்; சிறு பத்திரிகை யாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்; மற்ற நல வாரியங்களை போன்று பத்திரிகையாளர் நல வாரியத்திலும் பத்திரிகையாளர் சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித் துவம் அளிக்கப்பட வேண்டும்; பத்திரிகையாளர் நல வாரியத்தில் அரசு வழங்கிய அங்கீகார அட்டை உள்ளவர்கள் மட்டுமே உறுப்பின ராக சேர முடியும் என்ற விதியால் ஏறக்குறைய 90 விழுக்காடு பத்திரி கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. அனைவரையும் வாரியத்தில் இணைக்கும் விதத்தில் விதிகளை தளர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.